கடற்கரை மாநிலமான கோவா, ஏற்கனவே சுற்றுலா தலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிரடியான மாற்றத்தை சந்தித்து வருகிறது. கோவாவின் குடியிருப்பு நிலவரம் பெரும் மாற்றத்தைக் கடந்து, முதலீட்டாளர்கள், உயர்வருமானம் உள்ளவர்கள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வோருக்கு பிடித்த இடமாக மாறி வருகிறது.
அந்த வகையில், கோவாவில் தற்போது சொகுசு வில்லாக்கள், நடுத்தர விலையில் கிடைக்கும் அபார்ட்மெண்ட்கள் ஆகியவற்றுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நிலத்தின் மதிப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு முதலீடு செய்வோருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

கொரோனா காலகட்டத்திற்கு பின் கோவாவின் ரியல் எஸ்டேட் சந்தை திடீரென மாற்றமடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு விலை 66.3% உயர்ந்துள்ளது. மும்பை, பெங்களூரு, புனே, டெல்லி போன்ற பெருநகரங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களான NRI-களிடமிருந்து கோவாவுக்கு பெரும் சுகாதாரமான தேவை உருவாகியுள்ளது. இரண்டாவது வீடு வாங்குவது மட்டுமின்றி, வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
சமீப காலமாக ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை உள்ள அபார்ட்மெண்ட்களும் அதிகமான விற்பனையை சந்திக்கின்றன. குறிப்பாக 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் முதலீட்டாளர்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும், நீண்ட கால முதலீடு வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதும்தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் வடகோவா (North Goa) மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக அஞ்சூனா, வகேட்டோர் மற்றும் கந்தோலிம் போன்ற பகுதிகளில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் வில்லா விலைகள் ஆண்டுக்கு 28% உயர்ந்துள்ளன. இந்த பகுதிகளில் வீடுகள் சதுரஅடிக்கு சுமார் ரூ.10,800 என்ற சராசரி விலையில் விற்பனையாகின. அதேசமயம், சொகுசு வில்லாக்கள் சதுரஅடிக்கு ரூ.19,400 வரை விற்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவின் மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள ரியல்எஸ்டேட் விலையுடன் ஒப்பிட்டால், இவை இன்னும் போட்டித் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன.
இதுகுறித்து Conscient Infrastructure Pvt. Ltd. நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், "இத்தகைய முதலீடுகள் வாழ்க்கை தரத்தையும், வருங்கால மதிப்பையும் ஒருங்கிணைக்கின்றன. குறிப்பாக அசாகாவ் (Assagao) என்பது இந்த புதிய சொத்து வகையை அழகாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. விருப்ப வாழ்க்கையின் எதிர்காலம் அமைதியாகவும், ருசிகரமாகவும் இங்கே கட்டமைக்கப்படுகிறது" என்றார்.
கோவாவில் குறைந்த காலத்திற்கு வீடுகளை வாடகைக்கு விடும் முறை தற்போது முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமானதாக மாறியுள்ளது. உதாரணமாக ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.10,500-க்கு மேல் வரை வாடகை கிடைக்கிறது. அப்படி பார்த்தால், மாதம் ரூ.5.3 லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறது. மேலும், அரம்போல் போன்ற comparatively சிறிய கடற்கரை நகரங்களிலும் மாத வருமானமாக ரூ.80,000 வரை கிடைப்பதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
கோவாவில் வீட்டு விலைகள் மற்றும் வாடகை வருமானம் ஆகிய இரண்டும் வேகமாக உயர்ந்து வருகின்றன. வடகோவாவில் வாடகை வருமானம் ஆண்டுக்கு 8% முதல் 9%, தென்கோவாவில் 6% முதல் 8% வரையும், பாகா போன்ற இடங்களில் மாத வருமானம் ரூ.5 லட்சம் வரையும் கிடைக்கிறது. இப்போது பலரும் இயற்கை சூழலிலும், வசதியான வாழ்க்கையிலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதனால் கோவா, வீடு வாங்குவதற்கான முக்கிய இடமாக மாறியுள்ளது.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications