ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. அதே நேரத்தில் பிட்காயின் விலையில் பெரிய மாற்றமின்றி குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே அப்படியே நீடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் நேரங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதனால் பல முதலீடாளர்களும் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர். அனைத்திந்திய நகை வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.98,170 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.
உலகளாவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாலும், புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்றவற்றின் காரணமாக பாதுகாப்பான சொத்துகளுக்கு முதலீட்டாளர்கள் திரும்புவதாலும் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று 24 கேரட் தங்கம் ரூ.1650 உயர்ந்து 10 கிராம் ரூ. 98,100-ஆக அதிகரித்தது. 24 கேரட்டில் 99.9% தூய தங்கம் இருக்கும்.

விஸ்டம் ஹேட்ச் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முழு நேர முதலீட்டாளராக இருக்கும் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, தனது X பக்கத்தின் சமீபத்திய பதிவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும்போது பிட்காயின் அதே அளவில் பின்தங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவடையும் நேரத்தில் முதலீட்டாளர்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இதுதான் நீண்ட காலமாக இருந்து வரும் மரபாக இருக்கிறது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர் இந்த வழக்கமான விஷயத்தை பாதித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையும், பத்திரச் சந்தையும் அழுத்தத்தில் இருந்து வருகிறது, முதலீட்டாளர்கள் இதன் காரணமாக தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணி தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
பிட்காயின் முக்கியமாக அரசாங்கங்கள் அதிகமாக பணம் அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் நெருக்கடியான காலங்களில் முதலீட்டாளர்கள் நாடும் பாதுகாப்பான முதலீடாக இது இருக்காது. பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என்று பலர் கூறினாலும் உண்மையில் தங்கமும் பிட்காயினும் வெவ்வேறு மாதிரியான சொத்துக்கள். தங்கத்திற்கும் பிட்காயினுக்கும் இடையே எந்தவிதமான போட்டியும் இல்லை. இரண்டுக்குமே தனித்தனியான ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்று கூறி தனது பதிவில் எழுதியிருந்தார்.
இவருடைய பதிவை பார்க்கும் போது தங்கத்திற்கு நிகராக பிட்காயினை வைக்க கூடாது என்பது தெளிவாகிறது. பணவீக்கத்திற்கு எதிராக பிட்காயின் செயல்பட்டாலும் உண்மையாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஏற்படும் சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருக்கும் என்பதுதான் இவருடைய கருத்தாக உள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications