உலகின் முன்னணி தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதிகரிக்கும் வர்த்தகப் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 40 டாலருக்கும் கீழே சரியக்கூடும் என்று இந்நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும் இத்தகைய நிலை மிகவும் தீவிரமான காலகட்டத்தில் தான் நடக்கும் என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தற்போது ஒரு பேரல் 60 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது, இதேவேளையில் அமெரிக்க வெனிசுலா கச்சா எண்ணெய்-ஐ அமெரிக்கா தவிர உலக நாடுகள் யாரும் வாங்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்க ஆலோசனை செய்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளையிலும் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு விற்கப்படும் வேளையில் இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக 100-102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படியிருக்கையில் 40 டாலராகக் குறைந்தால் தற்போதைய கலால் வரி விதிப்பு முறையின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70-80 ரூபாய்க்கு விற்கப்படலாம்.
கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறையலாம்? என்ற தலைப்பில் கோல்ட்மேன் சாச்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து இந்த முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது.
உதாரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்து, கச்சா எண்ணெய் விநியோகம் அடிப்படை அளவுகளைப் பூர்த்தி செய்தால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 58 டாலராகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 50 டாலராகும் இருக்கும் என்று கணித்துள்ளனர்.
இருப்பினும், அமெரிக்கா பொருளாதாரத்தில் ரெசிஷன் மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் சூழ்நிலை உருவானால், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறைந்து, OPEC+ நாடுகள் வருமானத்தை அதிகரிக்க இதுவரையில் அறிவிக்கப்பட்ட பல கட்ட உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டால் விநியோகத்தை அதிகரிக்கும்.
இதனால் சந்தையில் தேவைக்கு அதிகமாக சப்ளை இருக்கும் இந்த சூழ்நிலையில், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 40 டாலருக்கும் சற்று குறைவாகச் சரியக்கூடும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வும் கணிப்பும் மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுபவை, இதை ஏப்ரல் 7 ஆம் தேதி யூலியா க்ரிக்ஸ்பி உள்ளிட்ட ஆய்வாளர்கள் வெளியிட்டனர். ஆனால் இது கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முதன்மை கணிப்பு அல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை தற்போது வேகமாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு பேரல் 75 டாலரை நெருங்கியிருந்த நிலையில், தற்போது 60 டாலருக்கு அருகில் வந்துள்ளன. இதன் அடிப்படையில் நிலையான பொருளாதார வர்த்தக சூழ்நிலையில் கோல்ட்மேன் சாச்ஸ்-ன் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 55 டாலராக இருக்கும் எனக் கணித்துள்ளது.
ஆனால் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, வரி விதிப்புகள் எனக் கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரையில் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

வரலாறு திரும்புமா? 300% வரை எகிறிய ஆயில் விலை! ஈரான் புரட்சி முதல் லிபிய போர் வரை: விரிவான அலசல்!

அதிரவைக்கும் $10 ஆயில் ஸ்பைக்! மார்ஜின் அழுத்தத்தில் சிக்கப்போகும் நிறுவனங்கள்? எப்படி தப்பிப்பது?

யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் இண்டிகோ வரை.. சரசரவென சரியும் பங்குகள்! முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி?

ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் விற்பனையில் வரும் முக்கிய மாற்றம்!! வாகன ஓட்டிகளே முதல்ல இத படிங்க!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!



Click it and Unblock the Notifications