டெல்லி: குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் 3,000 பேருக்கும் மேலாக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வணிக கூட்டம் என கூறி காலை 7.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வரக்கூறிய நிலையில், 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோல்ட்மேன் சாச்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன், கடந்த வாரம் நியூயார்க் தலைமையகத்தில், வணிக கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் போலியான வணிக கூட்டம் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் பணி நீக்கம் இருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்ப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மன்னித்து விடுங்கள் வேறு வழியில்லை
வணிக கூட்டம் என நினைத்து காலை 7.30 மணிக்கே கான்பரன்ஸ் அறைக்கு வந்த ஊழியர்கள், தங்களது மேலாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழியில்லை என கூறி வலுக்கட்டாயமாக பணி நீக்கமும் செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு Best of Luck என கூறி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு
இதேபோல ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஊழியர்களையும் காலை 7.30 மணிக்கே, மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் மேற்கொண்டு பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உடனடியாக வெளியேறலாம்
மற்ற பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் விடுமுறை நேரத்தில் இருப்பதால், இது குறித்தான தகவல்கள் எதுவும் ஊழியர்கள் முன் கூட்டியே அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறவோ அல்லது சக ஊழியர்கள் வரும் வரையில் காத்திருக்கவோ வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
David's Demolition Day
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இது மிக கடினமான நேரம். எங்களின் அனைத்து ஊழியர்களின் பங்களிப்பு குறித்து நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குகிறோம். கோல்ட்மேன் சாச்ஸ்-ன் இந்த பணி நீக்கமானது "David's Demolition Day" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியர்களும் பாதிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. இதனால் உலகளாவிய அளவில் இந்திய தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சில ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினர் தங்களின் மோசமான நிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
காரணிகள் எதுவும் மாறவில்லை
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பதற்றம், பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, சீனாவில் கொரோனாவின் தாக்கம் என பல காரணிகளும் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக ரெசசன் அச்சம் நிலவி வருகின்றன. ஏற்கனவே சில நாடுகள் ரெசசனுக்குள் நுழைந்துள்ளன. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications