அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் பல ஆயிரம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
கொரோனாவின் வருகைக்கு பிறகு பல ஐடி நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன. இது இனி வரும் காலாண்டுகளிலும் அதிகரிக்கும் என கூறி வருகின்றன.
அந்த வகையில் தற்போது காக்னிசன்ட் நிறுவனம் நடப்பு ஆண்டில் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பணியமர்த்தல்
ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், பணிமர்த்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் காக்னிசன்ட் நிறுவனமும் நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடப்பு ஆண்டில் 30,000 பிரெஷ்ஷர்களையும், 2022ம் ஆண்டில் 45,000 பிரெஷ்ஷர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Attrition விகிதம் அதிகரிப்பு
ஜூன் காலாண்டில் Attrition விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,01,200 ஆக உள்ளது. ஜூன் காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தில் இருந்து 23,300 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஜூன் காலாண்டில் ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 350 - 380 ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
வலுவான வருவாய் வளர்ச்சி
இது குறித்து காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் ஹம்ப்ரிஸ், ஜூன் காலாண்டில் நிகர வருமானம் 41.8% அதிகரித்து, 512 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்ட்லும் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவைக்கு அதிகரிப்புக்கு மத்தியில், Attrition விகிதமும் குறைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் அதிகளவில் பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் எனலாம்
இதே இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் 1.20 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தன. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் எனலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications