நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காலத்தில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறு மாத காலம் இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
அதனை இன்னும் மெருகேற்றும் விதமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், வாகனக்கடன் வாங்கியவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன் இப்படி ஏராளமானோரும் பயன்பெற்றுள்ளனர். கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த திட்டம் பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது.
கிரெடிட் கார்டு கடனுக்கும் வட்டி சலுகை உண்டு
நிச்சயம் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்கிறது இந்த அறிக்கை. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டிகான சலுகையும் இதில் அடங்கும். கடன் சலுகை திட்டத்தினை, அதாவது கால அவகாசத்தினை நீங்கள் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், (loan moratorium) அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சுமார் 6,500 நிதி பிரச்சனை ஏற்படலாம் என்கிறது ஒர் அறிக்கை.
சராசரி வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு நிலுவை தொகையை கடந்த மார்ச் முதம் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலகட்டத்திற்கு, உங்களது இஎம்ஐ அடிப்படையில் நிதி பரிவர்த்தனைகளுக்கான சராசரி வட்டி விகிதத்தின் (WALR) அடிப்படையில் வாடிக்கையாளரிடம் இருந்து வட்டி வசூலிக்கப்படும். இந்த WALR விகிதம் தணிக்கையாளர் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிடும்.
கடனை திரும்ப செலுத்தியவர்களுக்கு
கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் பிப்ரவரி 29, 2020 வரை நிலுவைத் தொகையில் வட்டி கணக்கிடப்படும். இதே இந்த மாதத்திற்குள் செலுத்தப்பட்ட கடன்களுக்கு, அந்த 6 மாத காலத்திற்கான எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தினை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோருக்கு திருப்பி செலுத்தி விடவேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடன் வழங்கும் நிறுவனம் ஒட்டிமொத்த வட்டி மற்றும் கடன் கணக்கில் எளிய வட்டி ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தினைத் தான் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கும்.
சலுகை கிடையாது
இந்த பணத்தினை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்திய பின்னர், கடன் வழங்கிய நிறுவனங்கள், மத்திய அரசிடம் இழப்பீடாக கோரும். வட்டி தள்ளுபடி செய்ய நவம்பர் 5ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. அதோடு பிப்ரவரி வரை தவறாமல் கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும்
ஒரு வேளை நீங்கள் உரிய தேதியில் பணத்தினை செலுத்தவில்லை எனில், குறைந்தபட்ச கட்டணத்தினையாவது செலுத்த வேண்டும், அப்படி செலுத்தவில்லை எனில், நீங்கள் கணிசமான வட்டி + அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையினை முழுமையாக பெற முடியாது. நீங்கள் உடனடியாக முழு தொகையை செலுத்த முடியவில்லை என்றால், குறைந்தபட்ச தொகையையாவது செலுத்தலாம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications