இந்திய ஐடி துறையில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, கடந்த இரண்டு காண்டுகளில் தனது ஊழியர்களுக்கு சராசரியாக 80% வேரியபிள் பே தொகையை மட்டுமே வழங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம், வர்த்தக மந்த நிலையில், செலவினம் குறைப்பு என பல செய்திகளுக்கு மத்தியில் அச்சத்தில் பணியாற்றி வந்த நிலையில், தங்கள் ஊழியர்களுக்கு சராசரியாக 85% க்கும் அதிகமான வேரியபிள் பே தொகையை வழங்கியுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில், விப்ரோ நிறுவனம் முறையே 80% மற்றும் 81% சராசரி வேரியபிள் பே தொகையை வழங்கியது. ஆனால், விப்ரோ நிறுவனத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கீட்டை கொடுப்பது மட்டும் அல்லாமல் 80,000 ஊழியர்களைக் கொண்ட விப்ரோ ஃபுல்ஸ்ட்ரைடு கிளவுட் வணிக பிரிவு ஊழியர்களுக்கு செப்டம்பர் காலாண்டில் 100 சதவீதமும், டிசம்பர் காலாண்டில் 89.74 சதவீதமும் வேரியபிள் பே கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சமீபத்திய ஈமெயிலில், வேரியபிள் மூன்று காரணிகளுடன் இணைக்கப்பட்டுக் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் வருவாய் (40%), மொத்த லாபம் (30%) மற்றும் மொத்த ஒப்பந்த மதிப்பு (30%) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு அணி வாரியாக வழங்கப்படும்.
விப்ரோ நிறுவனம் தனது லாப அளவீட்டை அதிகரிக்க, நிறுவனம் இரண்டாவது காலாண்டிலிருந்து மூன்றாம் காலாண்டுக்கு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஒத்திவைத்தது. இந்த தாமத்திற்கு பின்பும், ஊழியர்களுக்கு 6-8% சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
விப்ரோ நிர்வாகம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சியில் செலவுகளைக் குறைக்க ஆன்சைட்டில் அதாவது வெளிநாட்டில் பணியாற்றும் மிட்-லெவல் பதவிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
விப்ரோ பணிநீக்கம் செய்யும் மிட்-லெவல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் CAPCO நிறுவனத்திலிருந்து தான். விப்ரோ 2021 ஆம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான CAPCO-வை சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது, இது விப்ரோ தியரி டெலாபோர்டே தலைமையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவாகும்.
இதன் பின்பு விப்ரோ, காப்பீட்டுத் துறை டெக் சேவை பிரிவில் குறிப்பாகச் சொத்து மற்றும் விபத்து (பி&சி) இன்சூரன்ஸ் துறையில் அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்த, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்சூர்டெக் துறை நிறுவனமான ஆக்னே குளோபல் (Aggne Global) நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை 66 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications