தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீரா என தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்கள் மத்தியில் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலானோர் சொன்ன பதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களை பெருமளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய கார் நிறுவனங்கள் எப்போதும் இல்லாமல் தற்போது அதிகப்படியான கார்களை இருப்பு வைத்துள்ளது.
நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் ப்ரோமோஷன் ஆஃபர்களையும் அள்ளி வீச உள்ளனர். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பொதுவாகவே வருடாந்திர விற்பனையில் சுமார் 30-40% இந்த பண்டிகை சீசனின் போது தான் நடக்கும். அதுவும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் அதிகப்படியான கார் விற்பனை நடக்கும்.

இந்த நிலையில் தான் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீரா என கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் வாக்களித்தவர்களில், 59 சதவீதத்தினர் தீபாவளி கொண்டாட்டத்திற்கே பணம் இல்லை என தெரிவித்துள்ளனர். 30 சதவீதத்தினர் இல்லை எனவும், 12 சதவீதத்தினர் ஆம் எனவும் பதிலளித்துள்ளனர்.
ஆம் (12%): இந்த சிறிய பகுதி, தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களை குறிக்கிறது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பவர்களை மற்றும் புதிய காரை வாங்கும் அளவிற்கான நிதிநிலையில் உள்ளதையும் காட்டுகிறது.
இல்லை (30%): இந்த பகுதி, கார் வாங்க திட்டமிடவில்லை என்றாலும், பொருளாதார ரீதியாக கார் வாங்கும் நிலையில் இருப்பவர்களை குறிக்கிறது. அல்லது இவர்களிடம் ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருக்கலாம, இல்யெனில் வேறு காரணங்களுக்காக கார் வாங்காமல் இருக்கலாம்.
தீபாவளி கொண்டாடவே காசு இல்லப்பா..! (59%): இந்த பெரிய பகுதி, தீபாவளி கொண்டாட்டத்திற்கே பணம் இல்லாததால், கார் வாங்குவது பற்றி சிந்திக்க முடியாதவர்களை குறிக்கிறது. இது தற்போதைய சாமானிய மக்களின் பொருளாதார சூழலை பிரதிபலிக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், தீபாவளி காலத்தில் பெரும்பாலான மக்கள் புதிய கார் வாங்க திட்டமிடவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. பொருளாதார சவால்கள் மற்றும் பிற காரணங்களால், பெரும்பாலானோர் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் இது காட்டுகிறது.
தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால், நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர்கள் தங்களது கார் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக இருந்ததால், இந்த பண்டிகை காலம் விற்பனையை புத்துயிர்ப்பிக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.
பொதுவாக, தீபாவளி என்பது புதிய பொருட்களை வாங்குவதற்கான ஒரு சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. பல கார் நிறுவனங்கள் தற்போது வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்குகியுள்ளது. வட்டி இல்லா கடன், இலவச காப்பீடு, பரிசுகள் இப்படி பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் நோக்குடன் டாடா மோட்டார்ஸ், JSW MG மோட்டார், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு சலுகையை அறிமுகம் செய்து வருகின்றன. மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் பிராந்திய அடிப்படையிலான ஆஃபர்களை வழங்கி, விற்பனையை மேலும் ஊக்குவிக்கின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications