உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 33,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, ஆயினும் தற்போது மற்றொரு டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் சுமார் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்தத் திடீர் முதலீடு எதற்காக..? கூகுள் - ஏர்டெல் முதலீடு இந்தியாவில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்..?
கூகுள் - ஏர்டெல் முதலீடு
அமெரிக்க நிறுவனமான கூகுள், ஏர்டெல் நிறுவனத்தில் 700 மில்லியன் டாலர் நிதி முதலீடாகவும், 300 மில்லியன் டாலர் வர்த்தக வாயிலாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்ய மிக முக்கியமான காரணம் இந்தியாவில் கிளவுட் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான்.
கிளவுட் சேவை
கிளவுட் சேவை பிரிவில் ஏற்கனவே அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் ஆகியவற்றுடன் போட்டிப்போடவே இந்தப் புதிய முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
தற்போது கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது மூலம் இந்தியாவில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான கிளவுட் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளை அளிக்க முடியும். ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தில் அதிகப்படியான டெலிகாம் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் வர்த்தகங்களுக்கான கிளவுட் சேவையை வேகமாகவும் விரைவாகவும் விரிவாக்கம் செய்ய முடியும் எனக் கூகுள் நம்புகிறது.
கிளவுட் சேவை வளர்ச்சி
ரீடைல் முதல் வர்த்தகங்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கிளவுட் சேவை அளிப்பதில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் முன்னோடியாக இருக்கும் நிலையில் கூகுள் இப்பிரிவில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் முதலீடு செய்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம்
ஏர்டெல் நிறுவனம் தற்போது 2000 பெரிய நிறுவனங்களுக்கு, 1 கோடிக்கும் அதிகமான சிறு வர்த்தகங்களுக்கும் டெலிகாம் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் - கூகுள் 1 பில்லியன் டாலர் முதலீடு இரு தரப்புக்கும் அதிக லாபம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications