இணைய உலகை தலைகீழாக புரட்டிப்போடும் அளவுக்கு உயர்ந்துள்ள conversational generative AI chatbot தொழில்நுட்பத்தில் இதுநாள் வரையில் மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கி வந்த ChatGPT மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்..
கூகுள் பல வருடங்களாக மிகவும் சைலென்டாக உருவாக்கி வந்த இத்தொழில்நுட்பத்தை ChatGPT அறிமுகத்திற்கு பின்பு வேகப்படுத்தி சுந்தர் பிச்சை பெரும் கனவுடனும், இலக்குடனும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த AI CHATBOT தளமான Google BARD அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது 180 நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான வருடாந்திர கூட்டமான Google I/O நிகழ்ச்சி கலிப்போர்னியா தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கூகுள் தனது BARD சேவையை இந்தியா உட்பட உலகின் 180 நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது.
AI மாடல் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில் இதை மக்கள் நேரடியாக பயன்படுத்துவதற்கான தளத்தை அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை கூகுள் பெற்றுள்ளது என annual developer conference ஆன Google I/O கூட்டத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

கூகுள் பார்ட் தற்போது 180 நாடுகளில் மக்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்த முடியும், இதை தாண்டி ஜப்பானிய மற்றும் கொரியன் மொழியிலும் மக்கள் இதை பயன்படுத்த முடியும். விரைவில் 40க்கும் அதிகமான மொழியில் கூகுள் பார்ட் பயன்படுத்துவதற்காக மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக Google Assistant பிரிவு தலைவர் Sissie Hsiao இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

BARD தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், முன்பை விடவும் தப்போது சிறப்பாக பதில்களை பல வழிகளில் அளிக்க தயாராகியுள்ளது. ஒட்டுமொத்த கூகுள் BARD தளமும் PaLM 2 என்ற கட்டமைப்பில் இயங்கி வருகிறது, PaLM 2 என்பது கூகுள் உருவாக்கியுள்ள புதிய large language model (LLM). இதை விட முக்கியமாக கூகுள் உருவாக்கிய PaLM 2 தற்போது அனைத்து டெக் டெவலப்பர்களுக்கு கிடைக்கிறது. Google's PaLM API, Firebase கூட்டணியில் இதை பயன்படுத்த முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications