உலக நாடுகளில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போதுமான பணம் இல்லாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் மலை மலையாய் பணத்தை குவித்து வைத்திருக்கும் கூகுள் லாபத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் ஓரே காரணத்திற்காக தனது மொத்த ஊழியர்களில் சுமார் 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் திட்டமிட்டு சுமார் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பல லட்சத்தில் இருந்து பல கோடி ரூபாய் வரையிலான சம்பளம் வாங்கினாலும் பலரின் பணிநீக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடும் நேரத்தில் நடந்துள்ளது. உதாரணமாக பிரிட்டனில் பணியாற்றிய ஒரு இந்திய ஊழியர் பதவி உயர்வு பெற்று சுவிஸ் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட சில நாட்களிலேயே பணிநீக்க செய்யப்பட்டு உள்ளார்.

இப்படி பிரசவத்திற்கு சென்ற பெண் ஊழியர்கள், தாயின் மரணத்திற்காக விடுப்பில் சென்ற ஊழியர், மருத்து சிகிச்சைக்காக விடுப்பில் சென்ற ஊழியர் என பலரும் மோசமான நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிக்னல் கொடுத்துள்ளார் கூகுள், ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு கூகுள், ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை பேட்டி கொடுத்தபோது பணிநீக்கம் இருக்கும் என்பதை நேரடியாக அறிவிக்காவிட்டாலும், மறைமுகமாக சிக்னல் கொடுத்துள்ளார். கூகுள் தற்போது மிகவும் தீவிரமாக சேட்பாட் Bard-ல் பணியாற்றுவது மட்டும் அல்லாமல் ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்ற முக்கியமான வொர்க்ஸ்பேஸ் திட்டத்திலும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கூகுள் நிர்வாகம் தற்போது முக்கிய இலக்குகளை கொண்டு இயங்கி வருவது மட்டும் அல்லாமல் பல முக்கிய சேவைகளில் அதிகளவிலான மேம்பாடுகளை செய்யும் பணிகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த செலவில் சிறப்பான ஊழியர்கள் செயல்திறனை கொண்டு வருவதில் இலக்காக கொண்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications