மேலிடத்திலேயே கைவைத்த சுந்தர் பிச்சை.. ஆடிப்போன கூகுள் ஊழியர்கள்..!!

டெக் துறையில் மாபெரும் நிறுவனமாக விளங்கும் கூகுள் சத்தமே இல்லாமல் உயர்மட்ட நிர்வாக அமைப்பில் இருக்கும் ஊழியர்களை 10 சதவீதத்திற்கும் அதிகமாக வெளியேற்றியுள்ளது. சுந்தர் பிச்சை கடந்த 2 வருடமாக பல விமர்சனங்களுக்கு மத்தியில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ஊழியர்களை குறைத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சியில் மாபெரும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இந்த பணிநீக்க நடவடிக்கையின் மத்தியில் பல பிரிவுகளில் பணிநீக்கம் செய்யப்பட்டது. இதனால் பல ஊழியர்கள் தங்களுடைய வாழ்வில் மிகவும் மோசமான காலக்கட்டத்தில் பணியை இழக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இது தொடர்பான சமுக வலைத்தள பதிவுகள் இன்று வரையில் முக்கிய விவாத பொருளாக உள்ளது.

மேலிடத்திலேயே கைவைத்த சுந்தர் பிச்சை.. ஆடிப்போன கூகுள் ஊழியர்கள்..!!

இந்த மோசமான பணிநீக்க சுற்றில் கடைநிலை ஊழியர்களை மட்டும் அல்லாமல் உயர்மட்ட அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பதை சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்க சுற்றில் நிறுவனத்தில் சுமார் 10% உயர்மட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

உயர்மட்ட அதிகாரிகளில் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை சுந்தர் பிச்சை ஆல் ஹேண்ட்ஸ் மீட்டிங்-ல் அறிவித்துள்ளார்.

இந்த பணிநீக்கத்தில் டைரெக்டர் நிலை மற்றும் துணைத் தலைவர் பதவிகள் உட்பட பல்வேறு நிர்வாக பதவிகளும், அதிகாரிகளும் நீக்கப்பட்டு உள்ளனர். கூகுள் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பை வணிக இலக்குகளுடன் சிறப்பான முறையில் இணைக்கவும், வேகமான முடிவுகளை எடுக்கவும், இந்த பதவிகள் நீக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட கூகுளின் அதிரடி பணிநீக்கத்தின் மூலம் ஊழியர்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டு, செலவுகளை குறைக்கப்பட்டு உள்ளது. இதோடு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்வேறு சேவைகளும், சலுகைகளும் நீக்கப்பட்டது.

இதில் மிக முக்கியமான நடவடிக்கைகளில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியானது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகரித்து வரும் போட்டி, கூகுளின் செயல்திறன் மீதான கவனத்தை அதிகரிக்கவே இந்த மாபெரும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

OpenAI போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நிலையில், கூகுள் இந்த போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதை சரி செய்ய ஏஐ பிரிவில் பல முக்கிய அதிகாரிகள் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வளர்ந்து வரும் போட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நிறுவனம் வலுவான AI வீடியோ ஜெனரேட்டர் மற்றும் மேம்பட்ட தர்க்க அறிவுத்திறனை வெளிப்படுத்தும் ஜெமினி மாடல் தொடர் உள்ளிட்ட பல்வேறு AI-இயக்கப்படும் அம்சங்கள் மற்றும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமைப்பு மறுசீரமைப்புக்கு கூடுதலாக, கூகுள் தனது "Googleyness" எனப்படும் கலாச்சார அடையாளத்தையும் மறுவரையறை செய்கிறது. தொழில்நுட்பத் துறையின் மாறிவரும் இயக்கவியலுக்கு இந்த கலாச்சாரத்தை மாற்றியமைக்கும் அவசியத்தை சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தினார். இது புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய மிகவும் சுறுசுறுப்பான மற்றும் புதுமையான பணிச் சூழலை வளர்ப்பதை உள்ளடக்கியது.

செயல்பாடுகளை சுருக்கி, செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொண்டு, தனது கலாச்சாரத்தை மறுவரையறை செய்வதன் மூலம், கூகுள் தனது போட்டித்திறனை பராமரித்து வருகிற ஆண்டுகளில் தொடர்ந்து புதுமையை ஊக்குவிக்க முயல்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+