தினமும் ஊழியர்களுக்கு ராஜவிருந்து கொடுக்கும் கூகுள்.. காரணத்தை போட்டுடைத்த சுந்தர் பிச்சை..!!

உலகின் முன்னணி சர்ச்இன்ஜின் நிறுவனமான கூகுள் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு கூப்பன்கள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் சிஇஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை உணவு கூப்பன் வழங்குவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். "தி டேவிட் ரூபன்ஸ்டைன் ஷோ: பீர் டு பியர் கான்வர்சேஷன்" இல் கூகுள் தனது ஊழியர்களுக்கு ஏன் இலவச உணவை வழங்குகிறது என்பது குறித்து கூறியுள்ளார். அதேபோல், கூகுள் ஊழியர்களை எப்படி பணியமர்த்துகிறது என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

தற்போதைய தலைமுறையில் சிறிய குழந்தைக்கும்கூட கூகுள் நிறுவனம் என்றால் தெரியும். கூகுளில் வேலை வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. கூகுளின் சிஇஓவாக இருப்பவரும் நமது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை ஆவார். உலகளவில் கூகுள் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனம். இத்தகைய சூழ்நிலையில், கூகுள் தனது ஊழியர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது.

தினமும் ஊழியர்களுக்கு ராஜவிருந்து கொடுக்கும் கூகுள்.. காரணத்தை போட்டுடைத்த சுந்தர் பிச்சை..!!

அதில் குறிப்பாக கூகுள் தனது ஊழியர்களுக்கு இலவச உணவு கூப்பன்களை வழங்குகிறது. அதன் முழுச் செலவையும் நிறுவனமே ஏற்கிறது. சமீபத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சர் இலவச உணவு வழங்குவதன் அடிப்படையில், கஃபேவில் அனைத்து ஊழியர்களும் கூடி ஒன்றாக உணவருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில், "The David Rubenstein Show: Peer to Peer Conversation" ஒன்றில் சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஒரு பெரிய செலவாக இருக்காது என்றும் மாறாக அது நிறுவனத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது என்று கூறியுள்ளார். இலவச உணவு ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, அவர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது என்றார். கஃபேவில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலம் புதிய யோசனைகள் வருகின்றன என்றும் கூறினார். இந்த யோசனைகள் நிறுவனத்திற்கு நன்மையளிக்கும் என்றும், இந்த யோசனைகள் இலவச உணவை வழங்குவதற்கான செலவை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தானும் கஃபேக்களுக்குச் சென்று மக்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அதன் மூலம் தனக்கு பல யோசனைகள் வந்ததாகவும் சுந்தர் பிச்சை தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இது படைப்பாற்றலை அதிகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நல்ல நிறுவனச் சலுகைகளைத் தவிர, நிறுவனம் ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்துவதையும், அப்போது கூகுள் அவர்களிடம் என்ன கருதுகிறது என்பதையும் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட 90% விண்ணப்பதாரர்கள் கூகுளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். கூகுள் ஒரு வலுவான ப்ரோகிராமிங் பின்னணிகளை கொண்டவர்களை தேடுகிறது என்றும், கணினி அறிவியலைப் புரிந்துகொள்பவர்கள் சரிசெய்யவும், மேம்படுத்தவும் தெரிந்தவர்கள் ஆரம்ப நிலைக்கு தேடுவதாகவும் குறிப்பாக பொதுவாக இன்ஜினியரிங்கில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் இன்ஜினியர்களை தேடுவதாகவும், ஆற்றல்மிக்க மற்றும் போட்டி சூழ்நிலைகளில் சிறந்து விளங்கும் அணிக்கு முக்கிய நபராக இருப்பவர்களை கூகுள் உயர்வாகக் கருதுகிறது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது பற்றிய யோசனைகளின் அடிப்படையில் கூகுள் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்கிறது என்பதைப் பற்றிய கவனத்தை ஈர்த்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+