டெல்லி: தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சுந்தர் பிச்சை, உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்த பதவி உயர்வு மட்டுமா? சம்பள உயர்வு வேண்டாமா? என்ற நிலையில் தான், முன்னதாக சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சம்பளமும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
சம்பளம்+ஊக்கத் தொகை
ஆல்பாபெட் மற்றும் கூகுளின் சிஇஓ ஆக உள்ள சுந்தருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் (இந்திய மதிப்பில் 1,707 கோடி ரூபாய்) ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பங்கு ஊக்கத் தொகையானது நிறுவனத்தின் பங்கு சார்ந்த உரிமைகள் ஆகும். இதுபோக ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை
இந்த நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுவது ஆல்பாபெட் வரலாற்றில் இது தான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அளவிலான தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல. கடந்த 2016-ல், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு 200 மில்லியன் அமெரிக்க டாலர் அவருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை நிராகரிப்பு
கடந்த ஆண்டு அதிகமாக சம்பளம் பெற்றதாக உணர்கிறேன் என்றுகூறி தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் இந்த ஊக்கத் தொகையை அவர் ஏற்றுக் கொள்வாரா? இதுபோக, அவர் தொடர்ந்து இதே நிறுவனத்தில் பணியாற்றினால் ஆண்டுக்கு இரு பிரிவுகளாக 120 மில்லியன் (853 கோடி ரூபாய்) மற்றும் 30 மில்லியன் (213 கோடி ரூபாய்) ஸ்டாக் க்ராண்ட் ஆக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.
சுந்தர் பிச்சைக்கு புகழாரம்
கடந்த 2004-ம் ஆண்டு கூகுளில் சாதாரண ஒரு ஊழியராகத் தனது பணியைத் தொடங்கிய சுந்தர் பிச்சையின் வளர்ச்சி சர்வதேச அளவில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, ஒரு அசுர வளர்ச்சியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஆல்பாபெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின், அப்பதவியிலிருந்து விலகியபோது, சுந்தர் பிச்சை குறித்து கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரைவிட எவராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது என ஊழியர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications