நவீன தொழில்நுட்ப உலகில் பெரு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்படுவது அவ்வப்போது நாம் கேள்விப்படும் பொதுவான செய்தியாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுள் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை குறைக்கத் தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்த கூகுள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பணி நீக்கம் தொடர்பான காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.

கூகுள் நிறுவனத்தின் இந்த பணிநீக்கம் இந்தியாவில் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ரோல்களில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் பணி நீக்கங்கள் தொடரும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்து வெளியிட்டுள்ளது.
அதோடு கூகுள் நிறுவனம் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் பணிபுரியும் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக அதிக வருவாய் கிடைக்கக்கூடிய ப்ராஜெக்ட்களுக்கு மாற்றி நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் நடக்கப் போகும் இந்த பணி நீக்கம் குறித்து எந்த ஒரு தகவலையும் கூகுள் நிறுவனம் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதோடு எத்தனை ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற விவரமும் தெரியவில்லை. சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் டிவைஸ்கள், பிக்சல் போன்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக அறிவித்தது.
மறு சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விருப்ப ஓய்வு பெரும் திட்டங்களையும் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. பெரிய அளவிலான பணி நீக்கங்கள் நடப்பதற்கு முன்பு ஊழியர்கள் தாமாகவே ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேற ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தாங்களாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறினால் அதற்கு ஊழியர்களுக்கு சில சலுகைகளும் கிடைக்கும். இதனால் நிறுவனம் கட்டாயமாக பணிநீக்கம் செய்வதை குறைக்கும்.
2023-ஆம் ஆண்டிலும் கூகுள் நிறுவனம் இதே போல பணிநீக்கத்தை தொடர்ந்தது. அப்போது கூகுள் அதன் உலகளாவிய பணியாளர்களில் 6 சதவீதத்தைக் குறைத்தது. இதனால் சுமார் 12,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். அப்போது நடந்த பணி நீக்கங்கள் குறிப்பாக பொறியியல், ப்ராடக்ட் மற்றும் கார்ப்பரேட் ரோல்களில் பணிபுரிந்த ஊழியர்களைப் பாதித்தது.
2025-ஆம் ஆண்டில் இதுவரையில் 93 நிறுவனங்களில் 23,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியை பணிநீக்கம் குறித்து கண்காணிக்கும் தளமான Layoffs.fyi தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து பணிநீக்கம் குறித்த செய்தி வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நாளுக்கு நாள் வேலையிழப்பு அதிகரிப்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

பெங்களூரு மக்களே நிலைமை மோசமாகுதா? சீக்கிரமே பவர் கட் பிரச்சினையும் வரப்போகுதாம்!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications