உலகின் முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை தளமான கூகுள் 2023ல் 12000 ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் கூகுள் ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் முக்கியச் சேவை பிரிவான யூடியூப் தளத்தில் சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆகுமென்டெட் ரியாலிட்டி சேவையில் இயங்கும் வன்பொருள் பிரிவில் இருந்து 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் பண மழை கொட்டும் யூடியூப் தளத்தில் இருந்து 100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது கூடுதல் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பணிநீக்கம் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் சுந்தர் பிச்சை தலைமையிலான நிர்வாகம் 2023 பணிநீக்கத்தைப் போல் அல்லாமல் இந்த முறை ஒரு முக்கியமான சலுகை கொடுத்துள்ள காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகளவில் மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.
கூகுள் கடந்த 25 வருடமாகச் சர்ச், யூடியூப், விளம்பரம், கிளவுட் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாக வைத்திருந்த நிலையில் தற்போது கூகுள் தற்போது செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் அதிகப்படியான முதலீட்டையும், கவனத்தை செலுத்த துவங்கியுள்ளது.
இதேபோல் AI பயன்பாட்டைத் தனது பிற வர்த்தகத்தில் பயன்படுத்தி ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ளதால், பல பணிகள் மாயமாகி வருகிறது.
மேலும் சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூடுதல் பணிநீக்க அறிவிப்புகள் வர உள்ளது, ஆனால் இது கடந்த வருடத்தைப் போல் பெரிய அளவிலும், அனைத்து அணிகளையும் பாதிக்கும் வண்ணம் இருக்காது. இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு ஊழியர்கள் வெளியேறுவது தனக்கு வருத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
மேலும் தற்போது யூடியூப் பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 100 ஊழியர்களுக்குக் கூகுள் நிர்வாகம் 2 மாதம் கால அவகாசம் கொடுக்கிறது, இந்தக் காலகட்டத்திற்குள் கூகுள் நிறுவனத்தின் பிற அணியில் அல்லது பிற பணியில் சேர்ந்துகொண்டால் பணியைத் தொடரலாம். இல்லையெனல் அவர்களுடைய பணிநீக்கம் உறுதி செய்யப்படும்.
இதன் மூலம் கூகுள் ஊழியர்களுக்கு இந்த 2 மாத அவகாசம் பெரும் பாக்கியமாகப் பார்க்கப்படுகிறது, காரணம் அமெரிக்காவில் 2023ல் வெறும் 700 ஐடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் வெளியேறினால் புதிய வேலைக்கும், இந்தச் சம்பளத்தை விட அதிகமாகச் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
More From GoodReturns

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications