உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் கடந்த வருடம் கொத்துக் கொத்தாக 12,000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், 2024 ஆம் ஆண்டிலும் புதிதாகப் பணிநீக்கம் செய்துள்ளது கூகுள். இதன் மூலம் ஒட்டுமொத்த டெக் சேவை துறையும் அதிர்ச்சியில் உள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் அதிகமான ஊழியர்களை டிஜிட்டல் அசிஸ்டென்ட், ஹார்ட்வேர், இன்ஜினியிரிங் அணிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கூகுள் நிர்வாகம் தொடர்ந்து செலவின குறைப்பில் ஈடுபடுவதாக அறிவித்து இந்தப் புதிய பணிநீக்கத்தைச் செய்துள்ளது.

தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வாய்ஸ் மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பிரிவில் பணியாற்றியவர்களும், ஆக்மென்டெட் ரியாலிட்டி பிரிவின் வன்பொருள் அணியின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
இதேபோல் கூகுள் நிறுவனத்தின் சென்டரல் இன்ஜினியரிங் பிரிவில் இருக்கும் அதிகாரிகளும் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர். இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தில் செயல்படும் அணிகளின் எண்ணிக்கை, அணி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு மேம்பட்ட அணியாக மாறி செயல்திறன் அதிகரிக்க உள்ளது எனக் கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேபோல் மேலும் சில அணிகள் ஆய்வுகளைச் செய்து வருவதால் கூடுதலான பணிநீக்கங்கள் அடுத்தச் சில மாதங்களில் உலகளவில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அமேசான் சில முக்கியப் பிரிவில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இதனால் டெக் ஊழியர்கள் சற்றுப் பீதியில் தான் உள்ளனர்.
டிசம்பர் 12 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஆல் ஹேன்ஸ் மீட்டிங் ஆடியோ லீக் ஆனது அனைவருக்கும் நினைவிருக்கும், இந்தக் கூட்டத்தில் சுந்தர் பிச்சை முதல் பெரும் பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஒரு ஊழியர் பணிநீக்கம் குறித்த கேள்விக்குச் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தால் மிகக் கடினமான முடிவாகும், 25 வருடத்தில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்தது இல்லை, ஆனால் அவசியமானதாக இருந்தது.
இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் அலுவலகம், லேப்டாப் ஆக்சஸ்-ஐ திடீரெனக் கட் செய்தது உண்மையில் தவறான நடைமுறை, உண்மையில் அப்படிச் செய்திருக்கக் கூடாது இந்தப் பணிநீக்கத்தை மாறுபட்ட முறையில் செய்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார் சுந்தர் பிச்சை.
More From GoodReturns

50000 ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம்.. உலகின் முன்னணி கார் நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications