குருகிராம்: கூகுள் நிறுவனம் பெங்களூருவை தொடர்ந்து குருகிராம் பகுதியில் மிகப்பெரிய அலுவலக இடத்தை கையகப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் குருகிராமில் 5,50,000 சதுர அடி பரப்பிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் டேபிள் ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் கூகுள் நிறுவனம் இந்த அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. முதலில் 5,50,000 சதுர அடி அலுவலக இடத்தை பயன்படுத்துவது என்றும் பின்னர் மேலும் 2 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை பெற்றுக் கொள்வது என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான அலுவலக இடங்களை தேடி வந்தது. முதல் கட்டமாக பெங்களூருவில் அலுவலக இடத்தை வாங்கிய கூகுள் தற்போது குருகிராம் பகுதியில் வாங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனம் குரு கிராம் பகுதியில் 7 லட்சம் சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை செயல்படுத்தி வந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அதனை மூடிவிட்டது.
தற்போது மீண்டும் இந்தியா மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் கூகுள் தங்களுடைய டேட்டா மையங்களை இங்கே நிறுவுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் தான் இந்த நிறுவனம் பெங்களூருவின் ஆரம்பிக் நகரில் 6, 49,000 சதுர அடி அளவிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு சதுர அடி 62 ரூபாய் என்ற மாதாந்திர வாடகை விகிதத்தில் இந்த குத்தகை எடுக்கப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆறு லட்சம் சதுர அடி இடத்தையும், பெங்களூரின் மற்றொரு பகுதியில் 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தையும் குத்தகைக்கு எடுத்தது. இந்தியாவில் கூகுளை தவிர ஐபிஎம் மற்றும் சியான் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களுடைய செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதற்காக அலுவலக இடங்களை கையகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் அண்மை காலமாக அலுவலக இடங்களுக்கான ரியல் எஸ்டேட் சந்தை வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 85 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவை கடந்து இந்த துறையில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Story Written By: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications