பல கோடிக் கணக்கான மக்களுக்கு மறைமுக ஆசானாய் விளங்கும் கூகுள், நிறுவனம் ஐடி துறையில் மட்டும் அல்ல, இன்றைய இளைய தலைமுறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஜாம்பாவான் என்றே கூறலாம்.
பல ஆயிரம் கோடி கணக்கான மக்களின், பல லட்சம் கோடி சந்தேகங்களுக்கு அனுதினமும் பதிலளிக்கும் கூகுள் நிறுவனம், இன்றளவிலும் பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உள்ளது என்றால் அது பொய்யில்லை.
இந்த நிலையில் இந்த நிறுவனம் அதன் டேட்டா குறித்தான பாதுக்காப்பு கொள்கைகளை மீறியதாக கூகுள் அதன் நான்கு ஊழியர்களை பணி செய்துள்ளது. அதன் திறந்த கார்ப்பரேட் கலாச்சாரத்திற்காக மதிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில், இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கை குறித்து மேலாண்மை மற்றும் ஆர்வலர்கள், தொழிலாளர்களிடையே பதற்றத்தை அதிகரித்ததுள்ளது.
டேட்டா பாதுகாப்பு
புளும்பெர்க் நீயூஸ் பெற்ற ஆவணத்தின் படி, கடந்த திங்கட்கிழமையன்று அனைத்து ஊழியர்களுக்கும் எங்கள் தரவைப் பாதுகாத்தல் என்ற தலைப்பின் படி, ஆல்பாபெட் இன்க் கூகுள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. மேலும் இந்த நிறுவனம் மேமோவை உறுத்தியப்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான விரிவான தகவலை அளிக்க கூகுள் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பணி நீக்கம் செய்ய இதுவும் ஒரு காரணம்
சில கூகுள் ஊழியர்கள் கடந்த ஆண்டுகளில் இராணுவப் பணிகள் மற்றும் சீனாவில் தணிக்கை செய்யப்பட்ட தேடல் சேவை, இது தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிர்வாகிகளைக் கையாள்வது குறித்த பிரச்சனைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனராம். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்ய, இதுவும் வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.
கூகுள் தக்க பதிலடி
இந்த மோசடிகளால் கூகுள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பதிலடிகளை கொடுத்து வருகிறது. சமீபத்திய வாரங்களில் சில தொழிலாளர்களின் நிர்வாக நகர்வுகளை மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த நிலையில் கூகுள் ஊழியர் ஒருவர் அதன் உள்பிளவுகளை தடுக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது என்றும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பணியில் அமர்த்த போராட்டம்
இந்த நிலையில் கடந்த வெள்ளிகிழமையன்று கூகுளின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு வெளியே 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நிர்வாக விடுப்பில் வைத்திருந்த இரண்டு ஊழியர்களான ரெபேக்கா ரிவர்ஸ் மற்றும் லாரன்ஸ் லேண்ட்லப்பர் ஆகியோரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
தகவல் பாதுகாப்பு முக்கியம்
இது குறித்து கூகுள் தெரிவித்தபோது, நாங்கள் எப்போதுமே தகவல் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம். மேலும் கூகுள் நிறுவனத்தை மிரட்டுவதற்கான முயற்சிகளை நாங்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. முக்கிய வணிகம் அல்லது வேறு ஏதேனும் தகவல் கசிவுக்கும் வழிவகுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. எங்கள் சமூகத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் எங்கள் டேட்டா பாதுகாப்பு கொள்கைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது..
நம்பிக்கையை வளர்க்கும்
மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த மாதிரியான அதிரடியான நடவடிக்கைகள் அரிதானவை. ஒவ்வொரு நாளும் சரியானதை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி. அற்புதமான வேலையைச் செய்வது, அதே நேரத்தில் எங்கள் பயனர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் இது நம்பிக்கையை ஊக்குவிக்கும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.