உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள், இந்தியாவில் தனது வர்த்தகத்தையும், சேவைகளையும் அதிகரித்து வரும் வேளையில், அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தைக் கூகுள் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. தற்போது இதை செயல்படுத்தியுள்ளது கூகுள்.

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் பெங்களூருவில் 649,000 சதுர அடியில் வொயிட்பீல்ட் பகுதியில் இருக்கும் Alembic City-யில் புதிய அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூகுள் இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது உறுதியாகியுள்ளது.
கூகுள் இந்த அலுவலகத்தை மூன்று ஆண்டுகள் கால வாடகை ஒப்பந்தத்தில், சதுர அடிக்கு ரூ.62 என்ற வாடகையில் இந்த வளாகத்தைக் கூகுள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மாத வாடகை ரூ.4,02,38,000 அதாவது 4 கோடி ரூபாயாகும்.
அமெரிக்காவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் இருந்து சில முக்கிய பிரிவில் இருந்து பணியாளர்களைக் கொத்து கொத்தாக நீக்கிய சில வாரங்களில், இந்தியாவில் புதிய அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கூகுள் சில முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் உள்ள 600,000 சதுர அடி அலுவலக வளாகத்தின் வாடகை ஒப்பந்தத்தைக் கூகுள் கனெக்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் புதுப்பித்தது. அதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பாக்மனே ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் கூகுளின் அலுவலக பரப்பளவு 3.5 மில்லியன் சதுர அடி அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவின் 5 பெருநகரங்களில் 9.3 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
உற்பத்தி துறையிலும் நுழைந்த கூகுள் இந்தியாவில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிப்பதற்கும், ட்ரோன்கள் தயாரிப்பதற்குமான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் கூகுள் சென்னையில் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்ஃபோன்களின் உற்பத்தி, பிக்சல் 8 மாடலுடன் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா (Google for India) மாநாட்டில் பிக்சல் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான திட்டங்களைக் கூகுள் முதன்முதலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications