உலகம் முழுவதுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் ஏஐ நிபுணர்கள் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் நிபுணர்களை தேடித்தேடி பணிக்கு அமர்த்துகின்றன.
மெட்டா நிறுவனம் சாட் ஜிபிடி, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து நிபுணர்களை பல கோடி சம்பளத்திற்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி வலைவீசி பார்த்தது செய்திகளில் முக்கிய இடம் பிடித்தது. ஏனெனில் ஏஐ போட்டி அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனமும் இதேபோல ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களில் இருக்கும் நிபுணர்களை பல ஆயிரம் கோடி சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அழைப்பு விடுத்தது.

பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் இப்படி திறன்மிகு நபர்களை பணிக்கு அமர்த்துவதில் கவனமாக இருக்கக் கூடிய சூழலில் கூகுள் நிறுவனம் செய்த ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் பலரது கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. கூகுள் நிறுவனம் வேறு நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு வருமாரு அழைப்பு விடுத்து வந்த நிலையில் ஒரு படி மேலே சென்று தன் சொந்த ஊழியரையே கூகுளுக்கு வேலைக்கு வந்துவிடுங்கள் என மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரக்கூடியவர் ராஜ் தாப்ரே. இவர் பல ஆண்டுகளாக கூகுள் இந்தியா நிறுவனத்தில் மூத்த டேட்டா சயின்டிஸ்ட் அதிகாரியாக வேலை செய்து வருபவர். இந்த சூழலில் கூகுள் நிறுவனத்தின் ஹெச்ஆர் குழு இவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாம். அதில் நீங்கள் திறமை மிகுந்த ஊழியராக இருக்கிறீர்கள் கூகுளில் உங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு நீங்கள் ஏன் கூகுளில் வேலைக்கு சேர கூடாது என அதில் இருந்ததாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாப்ரே நான் ஏற்கனவே கூகுளில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் இவர்கள் என்ன எனக்கே மெயில் அனுப்புகிறார்கள் என குழப்பமடைந்தாராம். இதனை அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட பலரும் கூகுளை கிண்டல் செய்து வருகின்றனர். சொந்த ஊழியர்கள் யாருனு கூட கூகுளுக்கு தெரியாது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, தன்னுடைய எக்ஸ் பதிவை நீக்கி இருக்கும் தாப்ரே இது என்னுடைய தவறு தான். எனக்கு லிங்குடினில் பக்கம் இல்லை, என்னுடைய வெப்சைடையும் அப்டேட்டாக வைக்கவில்லை . கூகுள் ஏஐ மூலம் தான் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, எனவே ஏஐ கருவியால் வந்த பிழை தான் இது என கூறியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்களும் திறன் மிகு ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்புக்கான மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பை ஏஐ கருவிகளிடம் ஒப்படைத்துவிட்டன. இது தான் ராஜ் தாப்ரே விவகாரத்தில் ஏற்பட்ட பிழைக்கு காரணம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications