ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் வளர்ச்சியின் காரணமாக உலகம் முழுவதும் டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் 1 GW திறன் கொண்ட பிரம்மாண்ட டேட்டா சென்டர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. டேட்டா சென்டர்கள் வருவது மூலம் வேலைவாய்ப்பு, ஏஐ தொழில்நுட்பத்தின் திறன் அதிகரித்தாலும், இதனுடன் பல பிரச்சனைகள் உள்ளது.
டேட்டா சென்டர் இயக்கம் மூலம் அதிக வெப்பம் உருவாகும், அதை தொடர்ந்து குளிரூட்ட வேண்டும், மேலும் அதன் தொடர் இயக்கத்திற்கு அதிப்படியான தண்ணீர் வேண்டும். பொதுவாக டேட்டா சென்டர்களை குளிரூட்ட தண்ணீர் அதிகமாக பயன்படும், இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள காரணத்தால் கூகுள் முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

விசாகப்பட்டினத்தில் கூகுள் அமைக்கத் திட்டமிட்டுள்ள டேட்டா சென்டரை குளிரூட்ட தண்ணீருக்கு பதிலாக, ஏர் கூலிங் முறையைப் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், பெரிய அளவில் தண்ணீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில் இந்த டேட்டா சென்டருக்கு அதிகப்படியான எதிர்ப்பு உருவானது. இதை சரி செய்யும் வகையில் ஏர் கூலிங் முறையை கூகுள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் தெலுங்கானாவில் டிசிஎஸ் நிறுவனம் அமைக்கும் 1GW HyperVault டேட்டா சென்டர், அதிக அடர்த்தி கொண்ட கம்ப்யூட்டிங் தேவையை கருத்தில் கொண்டு Direct-to-Chip Liquid Cooling தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிப்களை குளிரூட்ட முடிவு செய்துள்ளது.
ஒரு டேட்டா சென்டரில் உள்ள கம்பியூட்டர், சர்வர், GPU உள்ளிட்ட கருவிகளில் மின்சாரத்தை பயன்படுத்தும் போது, அதில் இருந்து வெப்பம் வெளியேறும். எப்படி லேப்டாப் பயன்படுத்தும் போது சூடான வெப்பம் பின்பகுதியில் இருந்து வெளியேறுகிறதோ, அதே போல..
உதாரணமாக ஒரு 1 GW டேட்டா சென்டர் தொடர்ந்து இயக்க வேண்டுமாயின் சுமார் 1 GW அளவிலான வெப்பத்தை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதால், ஏஐ டேட்டா சென்டர்களில் குளிரூட்டும் தொழில்நுட்பம் முக்கியமான கட்டமைப்பாக உள்ளது.
இதேபோல் கூகுள், டிசிஎஸ் டேட்டா சென்டரில் ஏர் கூலிங் முறை பயன்படுத்துவதால் தண்ணீர் பயன்பாட்டை முழுமையாக நீக்கம் என்பது இல்லை, குறைவாக பயன்படுத்தும்.


Click it and Unblock the Notifications
