உலகம் முழுவதும் பணிநீக்கம் இருந்தாலும் கூகுள் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.
காரணம் பல முன்னணி டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவித்தும், கடைசியாக மிகவும் முடியாத கட்டத்தில் தான் பணிநீக்கத்தை அறிவித்தது.
இதை கூகுள் சிஇஓ சந்தர் பிச்சையும் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அறிவித்தார், இந்த பணிநீக்கம் அறிவிக்கும் முன்பு சுந்தர் பிச்சையின் சம்பளத்திலும், நிறுவன பங்கு வழங்குவதிலும் பெரும் மாற்றத்தை கூகுள் நிர்வாகம் அறிவித்தது.
கூகுள்
கூகுள் கடந்த வாரம் வெளியிட்ட பணிநீக்க அறிவிப்பில் தனது மொத்த ஊழியர்களில் 6 சதவீத பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து சுமார் 12000 ஊழியர்களை நிறுவன பணியில் இருந்து வெளியேற்றியது. இந்த நிலையில் முன்னணி முதலீட்டாளர் சுந்தர் பிச்சைக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
டெக் ஊழியர்கள்
கூகுள் நிறுவனம் பணிநீக்கம் குறித்து ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்தாலும் அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா போன்றவை பணிநீக்கம் அறிவித்தும் கூகுள் அறிவிக்காத நிலையில் கூகுள் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டதாகவே பலரும் நினைத்தனர்.
சுந்தர் பிச்சை
இந்த நிலையில் சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க முடிவை எதிர்த்து டெக் ஊழியர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார், இந்த கடிதம் தற்போது வைரலாகியுள்ளது.
ஹெட்ஜ் பண்டு
ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை நிர்வாக 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மிகவும் சரியான நடவடிக்கை, ஆனால் ஆல்பபெட் இன்னும் கூடுதலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
கிறிஸ்டோபர் ஹோன்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து சுமார் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கின் படி ஆல்பபெட் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,86,779 ஆக இருந்தது, இதை தற்போது 1.5 லட்சம் அதாவது 2021 ஆம் ஆண்டு எண்ணிக்கை இணையாக கொண்டு வர ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மீடியன் சம்பளம்
இதேபோல் 2021ல் கூகுள் ஊழியர்களின் மீடியன் சம்பளம் 300000 டாலர் இது சராசரி சம்பளத்தை காட்டிலும் மிகவும் அதிகம் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். 2022 ல் தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.
சுந்தர் பிச்சை ஈமெயில்
சுந்தர் பிச்சை பணிநீக்கம் குறித்துத் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தற்போது பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டத்திற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
25 வருட வரலாறு
மோசமான பொருளாதார மாற்றத்தில் கூகுளின் 25 வருட வரலாற்றில் மாட்டிக்கொண்டு உள்ளது. கடந்த 2 வருடம் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்காமல் அதிகப்படியான ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்துள்ளதால், தற்போது பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications