உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது இருக்கும் முக்கியமான போட்டி செயற்கை நுண்ணறிவு துறையில் தான். வெப் சர்ச் முதல் விளம்பர வருவாய் வரையில் AI ஆதிக்கம் இருக்கும் காரணத்தால் இத்துறையில் போட்டிப்போடும் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மத்தியிலான போட்டி சற்று கூடுதலாகவே இருக்கும் வேளையில், 2 இந்திய உயிர்களுக்காக ஆப்பிள், கூகுள் அடித்துக்கொள்கிறது என்பது தான் டெக் உலகில் முக்கிய விவாதமாக உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் AI துறையில் முன்னோடியாக இருக்கும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து தனக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளையும், தொழில்நுட்பத்தையும் OpenAI நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. ஆனால் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அப்படியில்லை, அனைத்தையும் சொந்தமாக உருவாக்க வேண்டும். இதற்கு திறன்வாய்ந்த ஊழியர்கள் அவசியம்.

AI துறையில் முன்னோடியாக இருக்கும் 3 இன்ஜினியர்கள் தற்போது ஹாட் டிமாண்ட் ஆக உள்ளனர். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த 3 பேரையும் ஈர்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது, இந்த மூவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 3 பேரில் சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஆனந்த் சுக்லா ஆகியோர் இந்தியர்கள், ஐஐடி கல்லூரி பட்டதாரிகள். இதில் சீனிவாசன் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஆக்டோபர் 2022ல் வெளியேறினார், ஆனந்த் நவம்பர் 2022ல் வெளியேறினார்.

சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.
இதேவேளையில் எலான் மஸ்க் துவங்க உள்ள புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் கிளை நிறுவனமான DeepMind நிறுவனத்தில் இரு மூத்த ஆராய்ச்சியாளர்களை தனது நிறுவனத்தில் பணியாற்ற ஈர்த்துள்ளார். இந்நிறுவனத்திற்கான செயல்பாடுகளை வேகப்படுத்த 10000 graphics processing units (GPUs) வாங்கியுள்ளார். இது AI மற்றும் high-end graphics செயல்களை செய்யக்கூடிய திறன் கொண்டவை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications