கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தங்களின் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியை வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தினார். அந்த வகையில் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 46 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு 90 விலக்கு தந்திருக்கிறார். இந்த சூழலில் தான் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தங்களுடைய கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியை வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக ஆல்பபெட் நிறுவனம் இந்தியாவில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய ஸ்மார்ட் போன்களை மட்டுமாவது இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக டிக்ஸன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளோடு ஆல்பபெட் நிறுவனம் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து இருக்கிறது.
வியட்நாம் மீது அமெரிக்கா 46 சதவீத வரியை விதித்துள்ளது. அதுவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே வியட்நாமில் ஸ்மார்ட் போனை தயாரித்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை விட இந்தியாவில் தயாரித்து இறக்குமதி செய்யும் போது அதற்கான செலவுகள் குறையும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிடுகிறது. இது தவிர தங்களுடைய ஸ்மார்ட் போனுக்கு தேவையான பேட்டரி, சார்ஜர்கள், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவற்றையும் இந்திய நிறுவனங்களிடமே தயாரித்து பெற்றுக் கொள்வதற்கும் கூகுள் ஆல்பபெட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போதைக்கு இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு தேவையான முக்கியமான உபகரணங்கள் அனைத்தும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்தப்படுகிறது. எனவே முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி என மாற்றுவதற்கு ஆல்பபெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூடிய விரைவில் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ரீதியிலான பேச்சு வார்த்தை நடத்தி ஒரு பரஸ்பர ஒப்பந்தத்திற்கு வர இருப்பதால் இந்தியா மீதான வரி மேலும் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆல்பபெட் நிறுவனம் திட்டமிடுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்து வருகிறது. அதே பாணியை தற்போது ஆல்பபெட்டும் பின்பற்ற தொடங்கியுள்ளது.
ஏற்கனவே டிக்ஸன் மற்றும் ஃபாக்ஸ் தான் ஆகிய நிறுவனங்கள் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்கின்றன. ஒரு மாதத்திற்கு 45 ஆயிரம் போன்கள் வரை உற்பத்தி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனை மேலும் அதிகரிப்பதற்கு தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications