அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் ! அடுத்த மாசமே சம்பள உயர்வு!! வந்தாச்சு முக்கிய அப்டேட்!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருக்கிறது. தசரா, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வர இருக்கின்றன. பண்டிகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உற்சாகமாக கொண்டாட கூடிய வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியீடு இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்களின் ஊதியத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீத தொகை என்பது அகவிலைப்படியாக கிடைக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் ! அடுத்த மாசமே சம்பள உயர்வு!! வந்தாச்சு முக்கிய அப்டேட்!!

உதாரணமாக ஒரு நபரின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் என வைத்துக் கொண்டால் 18,000 ரூபாயுடன் சேர்த்து அவருடைய சம்பளத்தில் 55 சதவீதம் அதாவது 9,900 ரூபாய் கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் வரையிலும் பின்னர் ஜூலையில் இருந்து டிசம்பர் வரையிலும் என கணக்கீடு செய்யப்பட்டு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது . இந்த ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜூலை மாதத்தில் இருந்து கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

இந்த முறை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமாம். அதாவது தற்போது 55 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில் அது 58% ஆக உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்திலேயே அகவிலைப்படி உயர்ந்து விடும் என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அரியர் பணமும் அக்டோபர் மாத சம்பளத்திலேயே வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கக்கூடிய ஒரு மத்திய அரசு ஊழியர் இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு அத்துடன் சேர்த்து கூடுதலாக 10,440 ரூபாயை அகவிலை படியாக பெறுவார் . ஏற்கனவே சம்பள கமிஷன் தாமதமாவதால் வருத்தத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதலே 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை சம்பள கமிஷன் பணிகளே தொடங்கவில்லை, எனவே இந்த பணிகள் முடிந்து சம்பள உயர்வு கிடைக்க 2027ஆம் ஆண்டு வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+