இது மட்டும் நடந்துட்டா இந்தியாவுக்கு Starlink தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி..!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உயர் வேக இணையம் என்பது அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் அடிப்படை தேவையாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கான்பரன்ஸ், கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற சேவைகள் நம்முடைய தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட நிலையில், அதிக வேகமும் திறனும் கொண்ட Wi-Fi சேவையின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசு மக்களுக்கு இனி 10 மடங்கு வேகமுடைய Wi-Fi சேவையை வழங்கும் முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) தற்போது 6GHz அலைவரிசையின் கீழ்பகுதியான 5925 MHz முதல் 6425 MHz வரை உள்ள 500 MHz இடைவெளியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக delicensed (அனுமதியின்றி பயன்படுத்தும் வகையில்) செய்துள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம் இந்தியாவில் வீட்டு Wi-Fi சேவைகளின் வேகம் 9.6Gbps வரை அதிகரிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இது மட்டும் நடந்துட்டா இந்தியாவுக்கு Starlink தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி..!!

6GHz என்பது மிட்-பேண்ட் எனப்படும் இடைநிலை அலை வரிசையாகும். இது 5925 MHz முதல் 7125 MHz வரை மொத்தமாக 1200 MHz இடைவெளியை கொண்டுள்ளது. இதில் மேல்பகுதியான 6425 MHz முதல் 7125 MHz வரை முன்பே 4G மற்றும் 5G சேவைகளுக்காக அரசு ஒதுக்கியிருந்தது. தற்போது அதன் கீழ்பகுதியான 5925-6425 MHz பகுதியே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக delicensed செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் முழுமையான 6GHz பகுதியையும் 5G சேவைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், அரசு நடுநிலையான தீர்வை தேர்ந்தெடுத்துள்ளது. இது ஒரே நேரத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கும், டிஜிட்டல் தொழில்துறைக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தியாவில் தற்போது 2.4 GHz மற்றும் 5 GHz என்ற இரண்டு Wi-Fi பாண்ட்களில் (frequency bands) சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை தற்போது மிகவும் சுருங்கியுள்ளன மற்றும் அதிக தரவு வேகத்தையும், திறனையும் தருவதில் குறைவு உள்ளது. அதனால், வீட்டு பயன்பாட்டிலும் தொழில்நுட்ப வசதிகளிலும் (online gaming, IoT, virtual reality போன்றவை) பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

6 GHz பாண்ட் திறக்கப்படுவதால், இந்த குறைகளை அகற்றும் வகையில் அதிக வேகம், திறன் மற்றும் வலுவான இணையச் சேவைகளை வழங்க முடியும். உலகின் பல முன்னணி நாடுகள் - அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா போன்றவை இதனை ஏற்கனவே தங்களுடைய உள்நாட்டு வலையமைப்புகளில் பயன்படுத்தி வருகின்றன.

6 GHz பாண்ட் மூலம் 9.6 Gbps வரை தரவு வேகம் கிடைக்கும். இது தற்போதைய 5 GHz பாண்டில் கிடைக்கும் 1.3 Gbps மற்றும் 2.4 GHz பாண்டில் கிடைக்கும் 600 Mbps -ஐவிட மிக அதிகம். Wi-Fi 6E மற்றும் Wi-Fi 7 போன்ற அடுத்த தலைமுறை வைஃபை தொழில்நுட்பங்கள் இந்தியாவில் விரைவில் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதிய Wi-Fi ரவுடர்களும், அதேபோல் கம்ப்யூட்டர் மற்றும் கேமிங் கன்சோல்கள் (Sony PlayStation 5 Pro போன்றவை) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட முடியும்.

தற்போது சில புதிய சாதனங்கள் இந்தியாவில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், தேவையான கம்பி அலைகள்(Wire waves) கிடைக்காமல் இருப்பதுதான். 6 GHz பாண்ட் திறக்கப்பட்டால், இத்தகைய சாதனங்களும் இந்தியாவில் விரைவில் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) கீழ் 5,925 MHz முதல் 6,425 MHz வரை உள்ள கீழ்தண்ட 6 GHz பகுதியை delicense செய்ய முன் வந்துள்ளது. இதனால், குறைந்த செலவில் Wi-Fi சேவைகள் விரிவாக வழங்க முடியும். இந்தச் செய்தியை தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள் மிகவும் வரவேற்கின்றன. அமேசான், கூகுள், மெட்டா, Qualcomm மற்றும் Netflix போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு கொண்டுள்ளன.

மொபைல் தொலைத்தொடர்பு நிறுவனம் (telcos) முழு 6 GHz பாண்ட் மொபைல் ப்ராட்காஸ்ட் (mobile broadband) சேவைகளுக்காகவே ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாலும், DoT ஒரு சமநிலை தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது, 6 GHz பாண்டில் மேல்தண்ட பகுதியை 4G மற்றும் 5G சேவைகளுக்காகவே பாதுகாத்து, கீழ்தண்ட பகுதியை WiFi பயன்பாட்டுக்கு திறந்துள்ளது. தொழில்நுட்ப உலகின் கோரிக்கைகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு இடையில் இந்த முடிவை DoT எடுத்துள்ளது.

6 GHz பாண்ட் திறப்பதால், பிஎம்-வானி (PM-WANI), பாரத் நெட் (BharatNet) போன்ற தேசிய அளவிலான திட்டங்களுக்கு பலன்கள் கிடைக்கும். இதனால் இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளிலும் விரைவான, மலிவான இணையம் கிடைக்கும். விரைவான மற்றும் நம்பகமான இணையம் கிடைத்தால், மக்கள் கல்வி, தொழில், வணிகம், மருத்துவம் மற்றும் பொது தகவல்தொடர்பு போன்ற பல துறைகளில் டிஜிட்டல் வாயிலாக முன்னேற வாய்ப்பு அதிகமாகும். WiFi 6E மற்றும் WiFi 7 போன்ற தொழில்நுட்பங்கள் விரைவாக இந்தியாவில் அறிமுகமாகி, புதிய சாதனங்கள், சேவைகள் உருவாகும்.

BIF அமைப்பின் தலைவர் TV ராமச்சந்திரன் அவர்கள், தற்போது திறந்துள்ள 500 MHz பகுதியே போதாது. குறைந்தபட்சம் 660 MHz பகுதியை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இங்கு Airtel, Amazon, Jio, Meta, Qualcomm போன்ற நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். IAFI தலைவர் பாரத் பாட்டியார், இதன் மூலம் கிராமப்புறங்களுக்கு மலிவான இணைய சேவை கிடைக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் அடிப்படைகள் வலுவடையும் என்று நம்புகிறார்.

IAFI தரவுகளின்படி, 6 GHz பாண்ட் திறப்பதால் இந்தியா ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் பலன்கள் பெறும் என கணிக்கப்படுகிறது. இது தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்து, செலவினங்களை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்மை தரும்.

FAQs
6GHz பாண்ட் எந்த வகை இணைய சேவைகளுக்கு உதவும்?

இது அதிக வேகத்துடன் ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ, வேர்ச்சுவல் ரியல்‌ட்டி போன்ற தொழில்நுட்பங்களுக்கு உதவும்.

delicensing என்றால் என்ன?

அதாவது, அரசு அந்த பாண்டை இலவசமாக வழங்கி, அனுமதி எடுக்காமல் பயன்படுத்தலாம்

6GHz பாண்ட் திறக்கப்படுவதால் என்ன பயன்?

இது வீட்டு இணைய வேகத்தை அதிகரித்து, அதிகமான சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்க உதவும்.

6GHz பாண்ட் என்றால் என்ன?

6GHz பாண்ட் என்பது இணையத் தரவுகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய வீதி ஆகும். இது Wi-Fi வேகத்தை அதிகரிக்கும்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+