டிசம்பர் 2024 நிலவரப்படி, மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் (CPSEகள்) 86% அதிகாரப்பூர்மற்ற இயக்குநர் (Independent directors) பதவிகள் காலியாக உள்ளதாகவும், அக்டோபரில் இருந்து 59% ஆக குறிப்பாக 64 பட்டியலிடப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் போர்டுகளில் சுமார் 750 அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர் பதவிகளில் 648 இடங்கள் டிசம்பர் மாத இறுதியில் காலியாக இருப்பதாக சமீபத்திய தரவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் இறுதியில் 392 காலியிடங்களும் அக்டோபர் இறுதியில் 441 காலியிடங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பணியிடங்களில் சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே இருந்த பலரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.எனவே, பட்டியலிடப்பட்ட 64 மத்திய பொத்துறை நிறுவனங்களின் போர்டுகளில் இதுபோன்ற 200 காலியிடங்களை நிரப்ப அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் அவற்றின் நிர்வாக அமைச்சகங்களும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறைகள் (DoPT) மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஆகியவற்றுடன் அவசரமாக பணியிடங்களை நிரப்புவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, பணிநியமன செயல்முறைகள் விரைவில் முடிக்கவும், தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது மற்றும் காலியிடங்களை நிரப்ப பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணியிடங்களின் விதிமுறைகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர் அதிகாரப்பூர்வமற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டியலிடப்படாத பொது நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி, குறைந்தது இரண்டு நிறுவனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவில் துணை நிறுவனங்கள் உட்பட 389 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 70 பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் BSE நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்தில் 8% க்கும் அதிகமாக உள்ளது. கார்ப்பரேட் நிர்வாகத்தின் மிகத் துல்லியமான தரநிலைகளின் பாதுகாவலர்களாகவும் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பவர்களாகவும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் செயல்படுவதால், காலியிடங்களை நிரப்புவது முக்கியத்துவம் பெறுகிறது. நிறுவனங்களின் தணிக்கைக் குழுக்கள் அவற்றின் சட்டப்பூர்வ தணிக்கை இணக்கங்களை மேற்பார்வையிடும், பெரும்பாலும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களை கொண்டுள்ளது.
அத்தகைய இயக்குநர்கள் வழக்கமாக மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். அதே மத்திய பொத்துறை நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதற்கான ஏற்பாடும் உள்ளது. அதற்கு அப்பால், இயக்குநர்கள் அதே மத்திய பொத்துறையின் குழுவில் பணியாற்ற முடியாது.
வழக்கமாக, மத்திய பொதுத்துறை வாரியங்களில் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தொடங்கப்படும். அவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்சம் மூன்று தகுதியான நபர்களை பரிந்துரைக்க வேண்டும். இதனை டிஓபிடி செயலாளர் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படுகிறது. மேலும், குழுவில் பொது நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications