சில நாட்களாக வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விலையை சீராக பராமரிக்க சில்லறை சந்தைகளில் அதிக அளவிலான ஸ்டாக்குகளை இறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க தரவுகளின் படி வெங்காயத்தின் சில்லறை விலை டெல்லியில் கிலோ ஒன்றுக்கு 67 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களில் மார்க்கெட்கள் மூடப்பட்டது மற்றும் பண்டிகை கால விற்பனை போன்றவற்றின் காரணமாக சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்கும் பொருட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
சோனிபட்டில் உள்ள குளிர்பதனக்கிடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் வெங்காயத்தை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு & காஷ்மீர், டெல்லி போன்ற பகுதிகளுக்கு இறக்குமதி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. வெங்காய விலையை சீராக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விலையை சீராக பராமரிக்கவும் தட்டுப்பாட்டை குறைக்கவும் 4,7 லட்சம் டன் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் சில்லறை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு வெங்காய வரத்து குறைவு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை ஏற்பட்டு வெங்காய விலை அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விளையும் வெங்காயத்தின் தரமும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டதும் இந்த விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
இந்தியர்களின் உணவில் சேர்க்கப்படும் முக்கிய காய்கறிகளில் வெங்காயமும் உண்டு ஒன்று சட்னி செய்வது முதல் குழம்பு வைப்பது வரை பல்வேறு உணவுகளிலும் வெங்காயம் முக்கிய பொருளாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான க்ரிசிலின் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கையில் வெஜ் மீல்ஸ் விலை வெகுவாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு மிக முக்கிய காரணம் காய்கறிகளின் விலை ஏற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த விலையேற்றம் உணவுப் பொருள் பண வீக்கத்தை அதிகரித்துள்ளது.
வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி, கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட 2.85 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி 3.85 லட்சம் ஹெட்டேருக்கு அதிகரிக்கப்பட்டது. சுமார் 34 சதவீதம் அதிகம் பயிரிடப்பட்டிருந்தாலும், மழையின் காரணமாக இந்த அதிகரிப்பும் பலன் தரவில்லை.
வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலும் தக்காளியின் சில்லறை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அசாத்பூர் மண்டியில் சராசரி தக்காளி விலை 27 சதவிதம் குறைந்து குவிண்டால் ஒன்று ரூ. 4000 ரூபாய்க்கு விற்பனையானது. பிம்பால்கானில் தக்காளியின் சராசரி விலை 35 சதவீதம் குறைந்து குவிண்டால் ஒன்று 2650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் உருளைக்கிழங்கின் விலை கடந்த 3 மாதங்களாக 37 என்ற விலையில் நிலையாக இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications