கார் மீதான வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசனை..? தீபாவளி பரிசு காத்திருக்கிறது..!

புதுசா கார் வாங்க போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தீபாவளி பண்டிகை விற்பனையில் அதிக வர்த்தகத்தைப் பெற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் காத்திருக்கும் இதேவேளையில், மத்திய அரசும் நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் உயர்த்த இதே தீபாவளி பண்டிகை காலத்தைத் தான் நம்பியுள்ளது.

முதல் கொரோனா தொற்று அலையின் போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை தீபாவளி பண்டிகையின் போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதே நிலை தான் இந்த வருடமும்.

இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும்பாலான வாகன பிரிவுகளில் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால், இத்துறையில் விற்பனையை அதிகரிக்கக் கார்கள் மீது விதிக்கப்படும் வரியை மத்திய அரசு இந்தத் தீபாவளி பண்டிகைக்காகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான SIAM அமைப்பின் 61வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய மத்திய வருவாய்த் துறை செயலாளர் தருண் பஜாஜ் பேசுகையில், தற்போது இருக்கும் நிலையில் கார்களின் விலையைக் குறைப்பது என்பது சாதாரணக் காரியமில்லை, ஆனால் கார் விற்பனையை நாட்டில் ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். இது விரைவில் ஆட்டோமொபைல் துறையை ஊக்கவிக்க சலுகைகள் வரலாமோ? என்ற எதிர்பார்ப்பினையும் இது ஏற்படுத்தியுள்ளது.

வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ்

வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ்

மேலும் தருண் பஜாஜ் ஆட்டோமொபைல் துறையில் ஏன் விற்பனை அதிகரிக்கவில்லை என்பதை ஆய்வு செய்யும் படி கேட்டுக்கொண்டு உள்ளார். இதேபோல் சிறிய ரகக் கார்கள் விற்பனையை விடவும் எஸ்யூவி பிரிவு கார்கள் அதிகளவில் விற்பனையைப் பதிவு செய்து வருகிறது.

சிறிய ரகக் கார் மீதான வரி

சிறிய ரகக் கார் மீதான வரி

பொதுவாகச் சிறிய ரகக் கார்களுக்கு 28 சதவீத வரி மட்டுமே, ஆனால் எஸ்யூவி கார்களுக்கு அதிகப்படியான வரி மற்றும் கூடுதலான செஸ் விதிக்கப்படுகிறது. ஆயினும் எஸ்யூவி கார்கள் விற்பனையில் வளர்ச்சி அடைந்து வருகிறது எனத் தருண் பஜாஜ் கூறினார்.

இரு சக்கர வாகன பிரிவு

இரு சக்கர வாகன பிரிவு

இதுமட்டும் அல்லாமல் இரு சக்கர வாகன பிரிவில் விலையில் ஏற்படும் சிறு மாற்றங்களும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்து வருவதாகத் தருண் பஜாஜ் கூறினார். இதைத் தொடர்ந்து விரைவில் மத்திய அரசு ஆட்டோமொபைல் துறைக்கு விற்பனையை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு அறிவிக்கும் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாகன விற்பனை அளவு

வாகன விற்பனை அளவு

இந்தியாவில் இரண்டு கொரோனா அலைக்குப் பின்பு பயணிகள் வாகன பிரிவு வர்த்தகம் 2015-16 நிலைக்கும், இரு சக்கர வாகன வர்த்தகப் பிரிவு 2014-15 நிலைக்கும், வர்த்தக வாகன பிரிவு 2010-11 நிலைக்கும், மூன்று சக்கர வாகன பிரிவு 2002-03 நிலைக்கும் சென்றுள்ளதாக SIAM அமைப்புத் தரவுகள் கூறுகிறது.

மாருதி சுசூகி ஆர்சி.பார்கவா

மாருதி சுசூகி ஆர்சி.பார்கவா

இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்சி.பார்கவா கூறுகையில் மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை ஆய்வு செய்து, பெரும்பாலான மக்கள் நன்மை அடையும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் சந்தை எலக்ட்ரிக் வாகன பிரிவுக்கு மாறி வரும் நிலையில் சந்தை வர்த்தகத்தைக் காப்பாற்ற முக்கியமான முடிவை எடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சேவை மற்றும் சரக்கு வரி வித்தியாசம்

சேவை மற்றும் சரக்கு வரி வித்தியாசம்

ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் சேவை மற்றும் சரக்கு வரி இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தியா போன்ற நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் வாழும் நாட்டில் மலிவு விலையில் பொருட்களைப் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்சி.பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 38% வரி

இந்தியாவில் 38% வரி

இந்தியாவில் வாங்கப்படும் கார்கள் மீது ஏற்கனவே அதிகப்படியான வரி விதிக்கப்படும் நிலையில் சாலை வரி என 8 முதல் 9 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாங்கப்படும் கார்களுக்குச் சராசரியாக 37 முதல் 38 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு அதிகமான வரி இந்தியாவில் தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெர்மனி, ஜப்பான்

ஜெர்மனி, ஜப்பான்

ஜெர்மனி நாட்டில் வாங்கப்படும் கார்களுக்கு 19 முதல் 20 சதவீதம் மட்டுமே, ஜப்பான் நாட்டில் 18 முதல் 22 சதவீதம் வரையில் தான் வரி. ஆனால் இந்தியாவில் 37-38 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறை ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரியை வசூலிக்கிறது. இது மொத்த வரியில் 12 சதவீதம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனம்

இந்தியாவில் இரு சக்கர வாகனம்

உலகில் பிற நாடுகளை விடவும் இந்தியாவில் இரு சக்கர வாகன பிரிவு மிகவும் பெரியது. இதற்குக் காரணம் மக்களின் பொருளாதார நிலை மட்டுமல்ல கார்களின் விலை கடுமையாக உள்ளதும் தான். இந்தியாவில் ஆடம்பர பிரிவு வாகனங்களின் விற்பனையும் அதிகம், குறிப்பாக 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

வரி குறைக்க அதிக வாய்ப்பு

வரி குறைக்க அதிக வாய்ப்பு

மேலும் வருவாய் துறை செயலாளர் பேசுகையில் தற்போதைய நிலையில் கார்களின் விலையைக் குறைக்க ஆட்டோமொபைல் நிறுவனத்தால் முடியாது என அவரே ஒப்புக்கொண்டார். இதனால் மத்திய அரசு கார் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால் கார் மீதான வரி அல்லது சாலை வரியை குறைக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+