2020ல் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அதிகமானோர் வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளையும் இழந்த காரணத்தால் மத்திய அரசு 6 மாத வட்டி சலுகை அளித்தது.
இந்த 6 மாத வட்டி சலுகை குறித்துச் சுப்ரீம் கோர்ட்-ல் தொடுக்கப்பட்ட வழக்கில் கடன் சலுகை பெற்ற கடனுக்கான கூட்டு வட்டியும் (Compound Interest) தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 1,800 முதல் 2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் பாதிப்பு அடைந்துள்ளது.

இதன் வாயிலாக 2020-21ஆம் ஆண்டில் 6 மாத காலத்திற்குக் கடன் வாங்கிய அனைவருக்கும் கூட்டு வட்டி சலுகை அளிக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வங்கி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி முதல் 3 மாத கடன் சலுகையின் போது கடன் வாங்கியவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் கடன் சலுகை பெற்றனர், இது 6 மாத முடிவில் 40 சதவீதமாகக் குறைந்தது. இதுவே கார்ப்பரேட் கடனில் பிரிவில் 25 சதவீத கடனாளர்கள் 6 மாத சலுகை பெற்றனர்.

ரிசர்வ் வங்கி மார்ச் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 1 முதல் மே 31, 2020 வரையில் 3 மாத கடன் சலுகை அளித்தது. ஆனால் கொரோனா தொற்றுக் குறையாமல் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்பை உருவாக்கிய காரணத்தால் இந்தக் கடன் சலுகை ஆகஸ்ட் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.
இந்த 6 மாத கடன் சலுகை அளிக்கப்படுவதில் வங்கிகள் மத்தியில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் வாயிலாகச் சுப்ரீம் கோர்ட் கடன் சலுகை பெற்றவர்கள் 6 மாதத்திற்கு முழுமையாகச் சலுகை எவ்விதமான கூட்டு வட்டியும் இல்லாமல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications