கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை உள்நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று கூடியது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோதுமை ஏற்றுமதி
கோதுமை ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வரவும், கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதியில் உள்ள விதிவிலக்குகளை நீக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலை உயர்வு
கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பட்டு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து உலகம் முழுவதும் கோதுமை பற்றாக்குறை இருந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தது.
உணவு பாதுகாப்பு
ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதிலும் மத்திய அரசு கவனத்துடன் இருந்தது. இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமை
இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூலை வரை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொள்கை
முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு எந்தவித தடையும் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என கொள்கை அளவில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications