கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை உள்நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று கூடியது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோதுமை ஏற்றுமதி
கோதுமை ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வரவும், கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதியில் உள்ள விதிவிலக்குகளை நீக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலை உயர்வு
கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பட்டு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து உலகம் முழுவதும் கோதுமை பற்றாக்குறை இருந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தது.
உணவு பாதுகாப்பு
ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதிலும் மத்திய அரசு கவனத்துடன் இருந்தது. இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமை
இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூலை வரை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொள்கை
முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு எந்தவித தடையும் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என கொள்கை அளவில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications