டெல்லி: பிறப்பு சான்றிதழ் என்பது நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பிறந்த உடன் அரசிடம் பதிவு செய்து பிறப்பு சான்றிதழை பெற வேண்டும் . பின்னர் ஆதார் கார்டு எடுப்பதில் தொடங்கி பலவற்றுக்கும் இது ஆவணமாக தேவைப்படும். இதில் தான் மத்திய அரசு தற்போது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வழக்கமாக குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் முறையில் கூடுதல் தகவல்களை சேர்க்க வேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி பிறப்பு சான்றிதழில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் மதம் மற்றும் பிற தகவல்கள் இனி தனித்தனியாக பதிவு செய்யப்படும்.

இதுவரை இருந்த விதிமுறையின்படி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதனை மாற்றியுள்ளது. குழந்தை பிறப்பு தொடர்பான முந்தைய பதிவு விண்ணப்ப எண்-1 இல், குடும்பத்தின் மதம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது புதிய விதியின்படி அதில் மேலும் ஒரு வரிசை சேர்க்கப்பட்டுள்ளது. அதில் குழந்தையின் பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் உள்துறை அமைச்சகம் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, மத்திய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் அரசின் பல்வேறு திட்டங்கள், பல்வேறு அடையாள அட்டைகளுக்கு இந்த தகவல் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோரும் கூட இது போல தனித்தனியாக தங்களின் மதங்களை பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே உள்ள பிறப்பு சான்றிதழ்களில் திருத்தம் இருக்குமா என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது தவிர, இப்போது ஒரு நபர் இறந்த பிறகு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில் சமீபத்திய இறப்புக்கான காரணம் மற்றும் பழைய நோய் தொடர்பான தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரலான ஆர்ஜிஐ இறப்புச் சான்றிதழில் நாள்பட்ட நோய் தொடர்பான தகவல்களை வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications