டெல்லி: பிறப்பு சான்றிதழ் என்பது நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பிறந்த உடன் அரசிடம் பதிவு செய்து பிறப்பு சான்றிதழை பெற வேண்டும் . பின்னர் ஆதார் கார்டு எடுப்பதில் தொடங்கி பலவற்றுக்கும் இது ஆவணமாக தேவைப்படும். இதில் தான் மத்திய அரசு தற்போது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வழக்கமாக குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் முறையில் கூடுதல் தகவல்களை சேர்க்க வேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி பிறப்பு சான்றிதழில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் மதம் மற்றும் பிற தகவல்கள் இனி தனித்தனியாக பதிவு செய்யப்படும்.

இதுவரை இருந்த விதிமுறையின்படி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதனை மாற்றியுள்ளது. குழந்தை பிறப்பு தொடர்பான முந்தைய பதிவு விண்ணப்ப எண்-1 இல், குடும்பத்தின் மதம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது புதிய விதியின்படி அதில் மேலும் ஒரு வரிசை சேர்க்கப்பட்டுள்ளது. அதில் குழந்தையின் பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் உள்துறை அமைச்சகம் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, மத்திய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் அரசின் பல்வேறு திட்டங்கள், பல்வேறு அடையாள அட்டைகளுக்கு இந்த தகவல் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோரும் கூட இது போல தனித்தனியாக தங்களின் மதங்களை பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே உள்ள பிறப்பு சான்றிதழ்களில் திருத்தம் இருக்குமா என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது தவிர, இப்போது ஒரு நபர் இறந்த பிறகு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில் சமீபத்திய இறப்புக்கான காரணம் மற்றும் பழைய நோய் தொடர்பான தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரலான ஆர்ஜிஐ இறப்புச் சான்றிதழில் நாள்பட்ட நோய் தொடர்பான தகவல்களை வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications