பல ஆண்டுகளாக ஆலோசனை செய்யப்பட்டு மத்திய அரசு முக்கியமான IDBI வங்கி குறித்து முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசு புதன் கிழமை செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் IDBI வங்கியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவின் வாயிலாக இன்றை மும்பை பங்குச்சந்தையில் ஐடிபிஐ வங்கியின் பங்கு மதிப்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் கிட்டதட்ட 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 43.50 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஐடிபிஐ வங்கி
மத்திய அரசு ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பெரும் பகுதி பங்குகளை நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அரசி பங்கு இருப்பை விடவும் எல்ஐசி அதிகப் பங்குகளை வைத்துள்ளது.
பங்கு இருப்பு
ஐடிபிஐ வங்கியில் தற்போது மத்திய அரசு 45.5 சதவீத பங்குகளையும், எல்ஐசி 49.2 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. அதிகப் பங்குகளை வைத்துள்ளதன் மூலம் இவ்வங்கியின் நிர்வாகம் எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ
எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் இவ்வங்கி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல்
இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கியின் பங்குகளை இரு தரப்பும் அதாவது எல்ஐசி மற்றும் மத்திய அரசும் பங்குகளைத் தனியாருக்கும் அல்லது வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கோ விற்பனை செய்ய உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு விற்பனை அளவு
மேலும் யார் யார் எந்த அளவிற்கான பங்குகளை விற்பனை செய்யப்படுகிறார்கள் என்பது விற்பனை செய்யும் போது முடிவு செய்யப்படும் என இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.
புதிய நிறுவனம்
மேலும் ஐடிபிஐ வங்கியைக் கைப்பற்றும் புதிய நிறுவனம் இவ்வங்கியில் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம், புதிய நிர்வாக முறையைக் கொண்டு வருவதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக
மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் ஐடிபிஐ பங்குகளை விற்பனை செய்வது மூலம் இதன் நிர்வாக ஆதிக்கத்தை இழப்பது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளை இருதரப்பும் செய்யத் தேவையில்லை. இதன் நிதியியல் சுமை பெரிய அளவில் குறையும், அதேவேளையில் இவ்வங்கியில் சிறு பங்குதாரர் ஆக எல்ஐசியும், மத்திய அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications