IDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..?!

பல ஆண்டுகளாக ஆலோசனை செய்யப்பட்டு மத்திய அரசு முக்கியமான IDBI வங்கி குறித்து முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசு புதன் கிழமை செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் IDBI வங்கியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவின் வாயிலாக இன்றை மும்பை பங்குச்சந்தையில் ஐடிபிஐ வங்கியின் பங்கு மதிப்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் கிட்டதட்ட 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 43.50 ரூபாய் வரையில் உயர்ந்தது.

 ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி


மத்திய அரசு ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பெரும் பகுதி பங்குகளை நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அரசி பங்கு இருப்பை விடவும் எல்ஐசி அதிகப் பங்குகளை வைத்துள்ளது.

 பங்கு இருப்பு

பங்கு இருப்பு

ஐடிபிஐ வங்கியில் தற்போது மத்திய அரசு 45.5 சதவீத பங்குகளையும், எல்ஐசி 49.2 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. அதிகப் பங்குகளை வைத்துள்ளதன் மூலம் இவ்வங்கியின் நிர்வாகம் எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ளது.

 எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ

எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் இவ்வங்கி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

 மத்திய அரசின் ஒப்புதல்

மத்திய அரசின் ஒப்புதல்

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கியின் பங்குகளை இரு தரப்பும் அதாவது எல்ஐசி மற்றும் மத்திய அரசும் பங்குகளைத் தனியாருக்கும் அல்லது வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கோ விற்பனை செய்ய உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளது.

 பங்கு விற்பனை அளவு

பங்கு விற்பனை அளவு

மேலும் யார் யார் எந்த அளவிற்கான பங்குகளை விற்பனை செய்யப்படுகிறார்கள் என்பது விற்பனை செய்யும் போது முடிவு செய்யப்படும் என இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.

 புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

மேலும் ஐடிபிஐ வங்கியைக் கைப்பற்றும் புதிய நிறுவனம் இவ்வங்கியில் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம், புதிய நிர்வாக முறையைக் கொண்டு வருவதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக

நிர்வாக

மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் ஐடிபிஐ பங்குகளை விற்பனை செய்வது மூலம் இதன் நிர்வாக ஆதிக்கத்தை இழப்பது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளை இருதரப்பும் செய்யத் தேவையில்லை. இதன் நிதியியல் சுமை பெரிய அளவில் குறையும், அதேவேளையில் இவ்வங்கியில் சிறு பங்குதாரர் ஆக எல்ஐசியும், மத்திய அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+