எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் (IDBI bank) பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த கலந்துரையாடல் விர்சுவல் மூலமாக அடுத்த வாரம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விர்சுவல் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.
யாரிடம் எவ்வளவு பங்கு?
ஐடிபிஐ வங்கியிடம் கிட்டதட்ட 95% பங்குகள் உள்ளது. இதில் எல்ஐசி மற்றும் அரசின் வசம் உள்ள பங்குகளும் அடங்கும். இந்த முழு பங்குகளும் விற்பனை செய்யப்படலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசின் வசம் 45.5% பங்கினையும், எல்ஐசியின் வசம் 49.24% பங்கினையும், புரோமோட்டர் அல்லாத பங்குதாரர்கள் வசம் 5.29% பங்கினையும் கொண்டுள்ளனர்.
திறந்த வெளி சந்தை மூலம் ஏலம்
ஐடிபிஐ வங்கியின் இந்த பங்கு விற்பனையானது திறந்த வெளி சந்தை மூலம் ஏலமிடப்படலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செபிக்கு பங்கு வெளியீட்டிற்கான வரைவினை அனுப்பியுள்ள எல் ஐ சி-யின் பங்கு வெளியீடு குறித்தான அறிவிப்பானது, விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிபிஐ செயல்பாடுகள்
ஐடிபிஐ வங்கிக்கு மார்ச் 2021 நிலவரப்படி 1884 கிளைகளும், 3388 ஏடிஎம்களும், சந்தை மதிப்பு 50,751 கோடி ரூபாயாகவும், காசா விகிதம் 50.45% ஆகவும், மொத்த டெபாசிட் விகிதம் 2.30 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே அட்வான்ஸ் 1.28 லட்சம் கோடி ரூபாயாகவும், நிகர வாராக்கடன் 1.97% ஆகவும் உள்ளது.
நிகரலாபம்
இதம் நிகர வட்டி வருவாய் 2021ம் நிதி ஆண்டில் 8517 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6977 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிகர வட்டி மார்ஜின் 3.5% ஆகவும், வரிக்கு பிந்தைய லாபம் 2021ம் நிதியாண்டில் 1359 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது கடந்த 2020ம் நிதியாண்டில் 12,887 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications