2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு படு பிசியாக இருக்கும் நிலையில், நிதித்துறையில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தனியார் மற்றும் பொதுத்துகை வங்கிகள் மத்தியில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் நிதியியல் செயல்பாடுகளையும், வங்கி விரிவாக்கம் பற்றிப் பெரிய அளவில் விவாதம் செய்யப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தின் முடிவில் சில முக்கியமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் புதிய வங்கி கிளைகளைத் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
15,000 புதிய வங்கி கிளைகள்
மத்திய அரசின் அறிவுரையின் படி 2020- 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கி சேவைகள் அனைவருக்கும் அனைத்து பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 14000- 15000 வங்கி கிளை திறக்க நாட்டின் முக்கியமான 4 வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
4 வங்கிகள்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆ பரோடா, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய 4 வங்கிகளை முக்கிய வங்கிகளாக அறிவித்து இந்த 15,000 புதிய வங்கி கிளைகளைத் திறக்க மத்திய அரசு செயல் திட்டம் தீட்டியுள்ளது. நாட்டின் வங்கி சேவைகள் அதிகம் இல்லாத நாட்டு மக்களை வங்கி சேவை மூலம் இணைக்கும் வகையில் இப்புதிய வங்கிகள் கிளை அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.ட
15 கிலோமீட்டர்
வங்கி சேவை இல்லாத கிராமங்களுக்கு 15 கிலோமீட்டர்-க்கு உட்பட்ட இடத்தில் வங்கி கிளைகள் அமைக்க வேண்டும் என நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுரை கொடுத்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி
மத்திய அரசின் திட்டத்தின் படி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகள் தலா 1500 புதிய வங்கிகளை, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் 600 முதல் 700 வங்கிகளைக் கிளைகளைத் திறக்க வேண்டும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய வங்கி கிளைகள் வங்கிகள் இல்லாத கிராமம் மற்றும் பஞ்சாயத் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
மார்ச் 2019
இந்திய வங்கித்துறையின் மார்ச் 2019 நிலவரத்தின் படி நாட்டில் 1,20,000 வங்கி கிளைகள், 2 லட்சம் வங்கி ஏடிஎம்கள் ஆகியவை உள்ளது. இதில் 35,649 வங்கிக் கிளைகள் மட்டுமே கிராமப் பகுதிகளில் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications