பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களை ரிசர்வ் வங்கி முக்கிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட மொத்தம் நான்கு பேர்களை ரிசர்வ் வங்கி தனது நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் இணைத்துள்ளது.
ஜூன் 14ம் தேதி முதல் அதாவது நேற்று முதல் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மூவர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக இருந்து ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக்காக தங்களது அறிவுரைகளை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராதொழிலதிபர் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பது தெரிந்ததே. சமூகத்தில் ஏதாவது சாதனை செய்பவர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் குறித்த வீடியோக்கள் வெளி வந்தால் உடனே அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு தன்னால் முடிந்த பரிசுகளையும் அளித்து அசத்துவார் என்பதும் அவரிடம் பரிசு பெற்றவர்கள் ஏராளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாக குழு உறுப்பினர்
அந்த வகையில் தொழிலதிபர் மட்டுமின்றி சமூக அக்கறையோடு இருக்கும் ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு ரிசர்வ் வங்கி தனது நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இணைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
4 உறுப்பினர்கள்
ஆனந்த் மஹிந்திரா மட்டுமின்றி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் வேணு சீனிவாசன் மற்றும் Zydus Life sciences நிறுவனத்தின் பங்கஜ் பட்டேல் ஆகியோர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பேராசிரியர் ரவீந்திர எச். தோலக்கியா
மேலும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் அகமதாபாத் பணவியல் கொள்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ரவீந்திர எச். தோலக்கியா அவர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் ஏற்கனவே 11 பேர் இருக்கும் நிலையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா உள்பட மேலும் 4 பேரை இணைத்து உள்ளதை அடுத்து மத்திய நிர்வாகக் குழுவில் தற்போது 15 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 ஆண்டுகள்
ஜூன் 14ம் தேதி முதல் 4 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை எது முன்னதாக இருக்குமோ அதுவரை மேற்கண்ட நான்கு பேர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவின் உறுப்பினராக இருப்பார்கள் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக்கு தேவையான அறிவுரைகள், வட்டி விகிதம் கூட்டுவது மற்றும் குறைப்பது, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை இந்த நிர்வாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications