இந்தியாவில் முன்பை விட மிக அதிகமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. யுபிஐ செயலி வாயிலாக ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடு குறியீடு இருந்தாலே போதும் யாருக்கு வேண்டுமானாலும் நாம் பணம் அனுப்பிக் கொள்ள முடிகிறது. ஒரு சிறிய பூக்கடையில் தொடங்கி ஒரு பெரிய கடையில் சென்று நகை வாங்குவது வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்துவது என்பது எளிமையானதாக மாறிவிட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் சூழலில் இது மற்றொரு புதிய சிக்கலையும் எழுப்பி இருக்கிறது. பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறிய நிலையில் இன்னமும் பணமாக பயன்படுத்தும் இடங்களில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்மில் நாம் பணம் எடுத்தால் கூட பெரும்பாலும் நமக்கு 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகின்றன. அரிதாக 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் முப்பது லட்சம் கோடிக்கு மேல் புழக்கத்தில் உள்ளன. 200 ரூபாய் நோட்டுகள் 5 லட்சம் கோடிக்கு கீழ் தான் புழக்கத்தில் உள்ளன. 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளும் 5 லட்சம் கோடி என்ற எண்ணிக்கையில் தான் புழக்கத்தில் உள்ளன.
இதன் காரணமாக மக்கள் கைகளில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது. இந்த அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள் புழக்கம் அதிகமாகி இருப்பது சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மக்கள் கடைக்கு வந்து ஒரு சிறிய பொருளை வாங்கினால் கூட 500 ரூபாயை நோட்டை தான் நீட்டுகிறார்கள், அவர்களுக்கு திரும்ப வழங்க 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் இருப்பதில்லை என புலம்புகின்றனர் வணிகர்கள்.

அதாவது சில்லறை பணம் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து இருப்பது சிக்கலை தந்திருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வழக்கமாக 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யும் ஏடிஎம்களுக்கு பதிலாக 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யக்கூடிய ஹைபிரிட் ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை குறைந்த மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளும் வகையில் ஹைபிரிட் ஏடிஎம்களை அமைக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
அதாவது உங்கள் கையில் 500 ரூபாய் இருக்கிறது என்றால் இந்த ஹைபிரிட் ஏடிஎம்-இல் செலுத்தி விட்டால் 500 ரூபாய்க்கு மாற்றாக 10,20, 50 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கும் முன்மாதிரி ஏடிஎம் தற்போது மும்பையில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய போக்குவரத்து மையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு ஏற்ற வகையில் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிடும்படி ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications