டெல்லி: கடந்த சில வருடங்களாகவே தொலைத் தொடர்பு துறைக்கு போராட்ட காலம் தான். அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வந்ததலிருந்தே கடும் நஷ்டத்தை கண்டு வருகின்றன. அதிலும் பொதுத் துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின்னடைவையே சந்தித்தது.
ஆரம்ப காலகட்டத்தில் இதை சமாளிக்க முடியாத இந்த நிறுவனம், தன்னார்வா ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெற்றனர்.
இன்று போட்டி நிறுவனங்கள் கூட 5ஜி லெவலுக்கு வந்துள்ள நிலையில், பொதுத்துறை இன்னும் 4ஜியை கூட எட்டவில்லை. அந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்து வருகின்றது.
மறுமலர்ச்சி திட்டம்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தை மேம்படுத்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான MTNL, BSNL உள்ளிட்ட இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. அதன் பிறகு தன்னார்வ விருப்ப ஓய்வூ திட்டத்தினை அமல்படுத்தியது. எனினும் தற்போது வரையிலும் கூட பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் சரிவில் தான் உள்ளன.
சொத்து விற்பனை திட்டம்
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி, போராடி வரும் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மறும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு, சொந்தமான கிட்டதட்ட 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வளவு சொத்துகள்
மேற்கண்ட இந்த சொத்துகள் ஹைத்ராபாத், சண்டிகர், பாவ் நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிஎஸ்என்எல்-லின் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இதே மும்பையில் உள்ள வசாரி ஹில், கோரேல்கனில் உள்ள MTNL 270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்ய படியலிடப்பட்டுள்ளது.
20 மாடி கட்டிடம்
ஒஷிவாராவில் 20 அடுக்குமாடி குடியிருப்புகளும் இந்த சொத்து விற்பனையில் அடங்கும். இந்த பிளாட்களில் 1 பெட்ரூம், ஹால், கிட்சன், , 2 பெட்ரூம், ஹால், கிட்சன் கொண்ட ஆகியவை அடங்கும். இதன் விலை 52.26 லட்சம் ரூபாய் முதல் 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ளது.
ஏலம் எப்போது?
எம்டிஎன்எல் சொத்துக்களுக்கான ஏலம் டிசம்பர் 14 அன்று நடைபெறும். இது பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சொத்துகள் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான புத்துயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த திட்டத்திற்காக, இந்த இரு நிறுவனங்களின் 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் கண்டறிந்து பணமாக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications