நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமான நிலையில் இருந்த நிலையில் கூட, வரி வசூல் விகிதமானது உச்சம் தொட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தன.
இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தவித்தனர். பல லட்சம் பேர் வேலையிழந்தனர். பல நிறுவனங்கள் பெரும் மோசமான சரிவினைக் கண்டன.
உச்சம் தொட்ட வருவாய்
பல நிறுவனங்கள் இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வணிகத்தினையே விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டன. அதே நேரத்தில் மக்கள் லட்சக்கணக்கானோர் தங்களது அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். ஆனால் இந்த ரணகளமான காலகட்டத்திலும் அரசின் வருவாய் மட்டும் உச்சம் தொட்டுள்ளது.
தூள் கிளப்பிய வரி வசூல்
இது குறித்து வெளியான அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மத்திய அரசின் நிகர வரி வருவாயானது 86% அதிகரித்து, 5.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நிகர நேரடி வரி வருவாய்
இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 2.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 1.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 109.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மறைமுக வரி வருவாய்
இதே மறைமுக வரி வருவாய் 3.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், மொத்தத்தில் முதல் காலாண்டில் 5.57 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலினை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வரி விகிதமானது முந்தைய ஆண்டில் 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 70.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications