நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறியது தான்.
அப்படி வரிவிதிகப்பட்டால் கிரிப்டோக்கரன்சி முதலீடுகளை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இதற்கும் ஒரு முட்டுகட்டையை போட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சமீபத்தில் ஒரு அறிக்கையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதித்தால், அது சட்டபூர்வமானதாகிவிடுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
வரி வருவாய்க்கான சாத்தியக் கூறு
இதுவே அரசு எந்தளவுக்கு கிரிப்டோகரன்சிகள் குறித்து யோசிக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில் கிரிப்டோ சொத்துகள் மூலம் அரசுக்கு வரி வருவாய் ஈட்டுவதற்காக சாத்தியக் கூறு இருப்பதாக கூறியுள்ளார்.
நிச்சயமற்ற நிலை
பட்ஜெட்டில் அரசின் அறிவிப்பினால் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி செலுத்த வேண்டியிருக்கும். எனினும் அது சட்டபூர்வமானது அல்ல, அதனை தடை செய்யவும் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வருமானம் வருவதற்கான வாய்ப்பு
இந்த நிலையில் தான் இந்தியா குளோபல் போரம் கிரிப்டோவின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளில் வருமானத்தினை பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
சட்டபூர்வமா?
கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான கருத்தினை கூறிய நிதியமைச்சர், இது குறித்தான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை முடிந்த பிறகு , சட்ட பூர்வமான ஆலோசனைகளும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு அரசு இதனை பற்றிய இறுதி முடிவினை எடுக்கலாம் என கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications