மேற்காசிய நாடுகளில் நிலவிவரும் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது ரஷ்யா போன்ற மற்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை பல மடங்கும் உயர்ந்திருக்கிறது. இந்தியா தனக்கு தேவையான பெரும் அளவிலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. இதனால் தான் ஈரான் போர் இந்திய கச்சா எண்ணெய் வரத்துக்கு பெரிய தடையாக வந்து நிற்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கம் போல கப்பல்கள் போக்குவரத்து நடந்தால் தான் நிலைமை சீராகும்.

ஏற்கனவே இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பெட்ரோல் டீசலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இந்திய மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழலில் மத்திய அரசு இந்தியாவிடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு இருக்கிறது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் , அடுத்த 60 நாட்களுக்கு தேவையான அளவு இருப்பு நம்மிடம் இருக்கிறது என கூறியுள்ளது.
பதற்றம் அடைந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் சென்று குவிய வேண்டாம் என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வருகிறது. இதற்கிடையே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விற்பனையில் தங்களுக்கு பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக கூறியிருந்தன. எனவே மத்திய அரசு இன்றைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை 13 ரூபாயிலிருந்து 3 ரூபாய் என்றும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாகவும் குறைத்திருக்கிறது.
இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையிலேயே தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் மதிப்பாய்வு செய்யப்படும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவரான விவேக் சதுர்வேதி தெரிவித்திருக்கிறார்.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் நிலைமையை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் பெட்ரோல், டீசல் விலைகளை மதிப்பாய்வு செய்யும் என அவர் கூறியிருக்கிறார். அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சதுர்வேதி, ஈரான் போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அரசின் பதில் நடவடிக்கை மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்து வருகிறது என விளக்கம் தந்துள்ளார்.
தற்போது மிக சவாலான சூழல் இருக்கிறது ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது வழக்கம் போல எதையும் நாம் கணிக்க முடியாது நாம் கடினமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் உள்நாட்டு நுகர்வு போக்குகள் உட்பட மாறி வரும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மதிப்பாய்வு செய்யும் எனக் கூறியுள்ளார்.
மதிப்பாய்வு என்றால் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் விலை மாறும் என அர்த்தம் இல்லை. பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைப்பது போன்ற கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான மதிப்பாய்வாகவே இது இருக்கும். அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சுமையை மக்கள் மீது திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்து இந்த திட்டத்தில் கைவைக்கப்படுமா..? என்னதான் தீர்வு..!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications

