இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சமீபத்திய வருடாந்திர கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாக குழுவில் முக்கியமான மாற்றங்கள் நடந்தது யாராலும் மறக்க முடியாது.
ஏற்கனவே முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஆகாஷ் அம்பானி தலைவராகவும், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவுக்கு ஈஷா அம்பானி தலைவராகவும், ரிலையன்ஸ் நியூ எனர்ஜிக்கு அனந்த் அம்பானியை நியமித்துள்ளார். இது அனைத்தும் தனித்தனி நிறுவன பதவியாக இருந்தாலும் உயர் மட்டநிர்வாக குழுவில் இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய பாதையை உருவாக்கும் முயற்சியில் உயர்மட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வந்தார்.
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் நீதா அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நிர்வாக குழுவில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் non-executive directors ஆக நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் நிர்வாகம் வெற்றிகரமான அடுத்த தலைமுறையினர் கையில் சென்றாலும் வர்த்தகம், நிதி பரிமாற்றங்கள், மதிப்பீடு, குடும்ப கவுன்சில் ஆகியவற்றில் பல விஷயங்கள் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது. இப்படியிருக்கையில் அம்பானி குடும்பத்தின் 4வது தலைமுறை குறித்து இணையவாசிகள் பேச துவங்கியுள்ளனர்.

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் அதிக மதிப்புடைய பிரிவாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவரான ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல் அகியோருக்கு 2022 இல் பிறந்த இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா பிறந்தனர். நவம்பர் 19, 2022 அன்று, இஷா அம்பானிக்கு கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும், அவரது மகள் ஆதியாவும் பிறந்தனர்.
இருவரும் பெரிய வீட்டு பிள்ளைகள் என்பதால் பரிசுகளுக்கு குறையே இல்லை. தாத்தா பாட்டிகளான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி, அஜய் பிராமல் - ஸ்வாதி பிராமல் ஆகியோர் பல ஆடம்பர கிப்ட்களை கொடுத்தனர்.
இதேபோல் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி ஸ்லோகா மேத்தா-வுக்கு டிசம்பர் 2020ல்
பிரித்வி அம்பானி என்ற மகனும், மே 31, 2023 ல் வேதா அம்பானி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சியதார்த்தமான நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணமாக உள்ளது.
இதனால் முகேஷ் அம்பானி சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்ய 3 பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த தலைமுறையினர் தங்களுடைய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்ய இளம் பருவத்திலேயே அவர்களை மேம்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல் தற்போது உலகம் முழுவதும் இளம் தொழிலதிபர்கள் உருவாகி வருகிறார்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications