இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன லாபத்தில் ஒரு கணிசமான தொகையை டிவிடெண்ட் என்ற பெயரில் ஈவு தொகையாக முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி ஒவ்வொரு பங்கிற்கும் 43 ரூபாய் ஈவு தொகையாக வழங்கப்படும் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிற.து இன்போசிஸ் நிறுவனம் வழங்கக்கூடிய இந்த டிவிடெண்ட் தொகை மூலம் நிறுவன பங்குதாரர்களுக்கு கோடிக்கணக்கிலான பணம் வர இருக்கிறது. குறிப்பாக இன்போசிஸ் நிறுவனர்களின் பேரன் பேத்திகள் பல கோடி ரூபாயை ஈவுத்தொகையாக மட்டுமே பெற இருக்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் படி பார்க்கும்போது இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 43 ரூபாய் ஈவு தொகை வழங்குகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பிரமோட்டர்களாக இருப்பவர்களுக்கு ஈவு தொகையாக மட்டும் 2330 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது. இன்போசிஸ் இணை நிறுவனங்களுல் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்தி இந்த நிறுவனத்தில் 6 கோடி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். அவருக்கு 261.5 கோடி ரூபாய் ஈவு தொகையாக கிடைக்க இருக்கிறது.
அதேபோல இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகளும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷிதா மூர்த்தி இந்த நிறுவனத்தில் 3.8 கோடி பங்குகளை சொந்தமானதாக வைத்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஈவுத்தொகையாக 167 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனர்களின் பேரன் பேத்திகளும் இந்த முறை கோடிக்கணக்கான தொகையை டிவிடெண்டாக பெற இருக்கின்றனர்.
குறிப்பாக இன்போசிஸ் இணை நிறுவனர்களுள் ஒருவரான எஸ்டி சிபுலாலின் பேரன் பேத்திகள் 200 கோடிக்கும் அதிகமான தொகையை டிவிடெண்டாக பெறுகின்றனர். நிகிதா மற்றும் மிலன் சிபுலால் ஆகிய இருவரும் 26.3 கோடி ரூபாயை டிவிடெண்ட் ஆக பெறுகின்றனர். அதேபோல நந்தன் நீலகேனியின் பேரனான தனுஷ் நீலகேனி சந்திரா 16 கோடி ரூபாய் டிவிடெண்ட் ஆக பெற இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாராயணமூர்த்தி தன்னுடைய மகன் வழி பேரன் எகாகிரா ரோகன் மூர்த்திக்கு 15 லட்சம் இன்போசிஸ் நிறுவன பங்குகளை பரிசாக வழங்கினார். இதன் மூலம் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகள் நாராயண மூர்த்தியின் பேரனுக்கு சென்றன. அப்போதே இதன் மதிப்பு 240 கோடி ரூபாய் . இதன் மூலம் பிறந்த சில மாதங்களிலேயே கோடீஸ்வரனான பெருமை இந்த குழந்தைக்கு கிடைத்தது. இந்த குழந்தை தற்போது டிவிடெண்ட் மூலம் 6.5 கோடி ரூபாயை பெற இருக்கிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications