இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை உலக நாடுகளில் இருந்து பெற்று, அதிகப்படியான வருவாய் மற்றும் லாபத்தையும் பெற்றது.
ஆனால் இதோடு சில முக்கியமான பிரச்சனைகளையும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்துள்ளது, ஆனால் இந்தப் பிரச்சனை ஐடி ஊழியர்களுக்குச் சாதகமாக மட்டும் அல்லாமல் ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது.
2021ல் ஜூன், ஜூலை காலத்தில் இந்திய ஐடி துறையில் உருவான The Great Resignation காலம் 2022ஆம் ஆண்டிலும் தொடரும் எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
The Great Resignation காலம்
2021ல் இந்தியா முழுவதும் டிரெண்டான முக்கியமான சொற்களில் The Great Resignation-ம் ஒன்று. இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடத்தில் பெற்ற அதிகப்படியான வர்த்தகத்தை உரியக் காலத்திற்குள் திறம்பட முடிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்தது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இதற்காக ஐடி நிறுவனங்கள் சக போட்டி நிறுவனங்களில் இருந்து அதிகப்படியாக ஊழியர்களை ஈர்த்துப் பணியில் அமர்த்தி வந்தது. இது அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களிலும் முக்கியமான பிரச்சனையாக மாறிய காரணத்தால் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.
2022ஆம் ஆண்டிலும் தொடரும்
இந்த மோசமான காலம் 2022ஆம் ஆண்டிலும் தொடரும் என்பது ஐடி நிறுவனங்களுக்குச் சோகமான செய்தியாக இருந்தாலும், ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆகவே உள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்
சக போட்டி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் போது இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வரையில் 70 முதல் 120 சதவீத சம்பள உயர்வுடன் பணியில் அமர்த்துகிறது. இதை விட ஐடி ஊழியர்களுக்குப் பெரிய ஜாக்பாட் கிடைக்காது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள்
மேலும் 2022லும் இந்திய ஐடி துறையில் Great Resignation காலம் தொடரும் என்பதை ஐடி ஊழியர்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அறிவித்துள்ள ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் டிசம்பர் காலாண்டின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (attrition rate) யாரும் எதிர்பார்க்காத வகையில் 15.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 11.9 சதவீதமாக மட்டுமே இருந்தது, இதேவேளையில் இந்திய ஐடி துறையில் டிசிஎஸ்-ன் 15.3 சதவீதம் தான் மிகவும் குறைந்தது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனங்களாக விளங்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (attrition rate) 25.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 20.1 சதவீதமாகவும், கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 11 சதவீதமாக இருந்தது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது. 3 மாதத்தில் 25 சதவீத ஊழியர்கள் வெளியேறினால் ஒரு நிறுவனத்தால் எப்படித் திறன்பட விளங்க முடியும்.
விப்ரோ
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் விப்ரோ 2021ல் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தாலும் ஊழியர்கள் வெளியேற்றம் இந்நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. விப்ரோ நிறுவனத்தின் attrition rate டிசம்பர் காலாண்டில் 22.7 சதவீதமாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 20.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications