செமி கண்டக்டர் உற்பத்தி மையமாகும் குஜராத்.. புதிய பாலிசி வெளியீடு..!

இந்தியா தற்போது செமி கண்டக்டர் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநில அரசு செமி கண்டக்டர்களுக்கான தனிக் கொள்கையை வகுத்துள்ளது. குஜராத் மாநிலம் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாநிலரசு குஜராத் செமி கண்டக்டர் பாலிசி 2022 -2027 என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

முதலமைச்சர் பூபேந்திர பட்டேலின் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில் செமி கண்டக்டர் துறையில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக கொண்டுள்ளது. தற்போது சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய செமி கண்டக்டர் ஆலைகளை குஜராத் மாநிலத்தில் தான் நிறுவி இருக்கின்றன.

 செமி கண்டக்டர் உற்பத்தி மையமாகும் குஜராத்.. புதிய பாலிசி வெளியீடு..!

அண்மையில் கூட முதலமைச்சர் பூபேந்திர படேல் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஒருங்கிணைப்பு ,சோதனை மற்றும் பேக்கிங் ஆலைக்கான அடிக்கல் நாட்டினார். 2500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த செமி கண்டக்டர் ஆலை செயல்பட இருக்கிறது.

அதேபோல தோலரா பகுதியில் டாடா நிறுவனம் சார்பாக தைவான் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டு வருகிறது. இது 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி சிஜி பவர் மற்றும் ரெனிசார்ஜ் என்ற நிறுவனம் 7500 கோடி ரூபாய் முதலீட்டில் சனாந்த் பகுதியில் மற்றொரு செமி கண்டக்டர் ஆலையை நிறுவ இருக்கிறது. கேனஸ் என்ற நிறுவனம் இதே பகுதியில் ஒரு நாளைக்கு 6 மில்லியன் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்யும் வகையில் 3300 கோடி முதலீடு செய்திருக்கிறது.

இந்தியாவில் தற்போது செமி கண்டக்டர் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ள மாநிலமாக குஜராத் மாநிலமே இருக்கிறது. அதுமட்டுமின்றி குஜராத் மாநில அரசு தங்களுடைய இந்த புதிய கொள்கை மூலம் செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு அவற்றின் மூலதன செலவினத்தில் 40 சதவிகித மானியம், 100% ஸ்டாம்ப் டூட்டி திரும்ப வழங்கும் முறை என்பன உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.

அதேபோல இந்த நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளத.
குஜராத்தில் இதற்காக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு செமி கண்டக்டர் நகரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு 75% மானிய விலையில் நிலங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த செமி கண்டக்டர் கொள்கையின் மூலம் குஜராத் மாநில அரசு 53 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+