டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சந்தை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் திடீரென 11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் எப்போதாவது வங்கி கணக்குகளில் நடப்பது ஒன்று தான். டெக்னிக்கலாக ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் சில மணி நேரங்களில் சரி செய்யப்படுவதும் உண்டு.
அப்படி தான் பங்கு சந்தை முதலீட்டாளரின் கணக்கில் பல ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இப்பிரச்சனை சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டீமேட்டில் ஆச்சரியம்
அகமதாபாத்தினை சேர்ந்த ரமேஷ் சாகர் என்பவரின் டீமேட் கணக்கில் தான் தீடிரென இவ்வளவு கோடி ருபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவருக்கு தெரிய வந்ததும் அவர் சந்தோஷப்படுவதா? அடுத்து என்ன செய்வது என திகைப்பில் ஆழ்ந்துள்ளார். எனினும் அவரின் சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. வெறும் 8 மணி நேரம் மட்டுமே நீடித்துள்ளது.
பங்கு சந்தை முதலீட்டாளர்
ரமேஷ் சாகர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு முதலீட்டாளர். கடந்த ஆண்டு தான் கோடக் செக்யூரிட்டிஸில் தனது டீமேட்டினை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த ஜூலை 22ம் தேதியன்று தான் அவரது டீமேட் கணக்கில் 116,77,24,43,277.10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அன்றே அவர் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து, 5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாகவும் கூறப்படுகின்றது.
டீமேட் எதற்காக
பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு டீமேட் குறித்து தெரிந்திருக்கலாம். பங்கு சந்தையில் வணிகம் செய்யத் தேவையான ஒரு கணக்கு ஆகும். இதன் மூலம் உங்களது பங்கு வணிக பரிவர்த்தனையை முழுமையாக காண முடியும்.
பலருக்கும் ஆச்சரியம்
ரமேஷ்-க்கு மட்டும் இந்த ஆச்சரியம் அல்ல, அன்றைய தினத்தில் பலருக்கும் இவ்வாறு தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், அது சில மணி நேரங்களுக்கு பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications