இந்தியாவில் நாம் பயன்படுத்தும் 80 சதவீத செராமிக் பொருட்கள் குஜராத் மாநிலத்தின் இருக்கும் ஒரு சிறிய நகரில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் செராமிக் சந்தையை தனது கைக்குள் வைத்திருக்கிறது குஜராத்தின் இந்த சிறு நகரம்.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மார்பி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள குடும்பங்களில் சுமார் 90% குடும்பம் டைல்ஸ் மற்றும் செராமிக் உற்பத்தியில் தான் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் இவர்கள் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் செராமிக் மற்றும் டைல்ஸ் விற்பனையில் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டு உலகிற்கே தரமான டைல்ஸ்கள் மற்றும் செராமிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

1930 களில் மார்பி நகரத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தி ஆலைகள் இன்று நாட்டிற்கே 80 சதவீத செராமிக் மற்றும் டைல்ஸ்களை உற்பத்தி செய்யும் ஆலைகளாக வளர்ந்துள்ளன. மார்பி நகரில் சுமார் 900 செராமிக் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இதனால்தான் இந்த நகரத்தை இந்தியாவின் செராமிக் நகரம் என அழைக்கிறார்கள் .
தரையில் பயன்படுத்தும் டைல்ஸ், சுவற்றில் ஒட்டப்படும் டைல்ஸ் மற்றும் சமையலறை, அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய டைல்ஸ்கள், வணிக வளாகங்களில் பயன்படுத்தக்கூடிய டைம்ஸ்கள் என அனைத்து வகையான செராமிக் டைல்ஸ்களும் இங்கே கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இங்குள்ள நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு விருப்பமான வடிவத்தில் டைல்ஸ்களை ஆர்டர் செய்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.
பாரம்பரியமாக இந்த நகரை சேர்ந்த பலரும் டைல்ஸ் மற்றும் செராமிக் பொருட்கள் உற்பத்தியில் தான் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப புதிய புதிய டைல்ஸ்களை வடிவமைத்து விற்பனை செய்வதே இத்தனை ஆண்டுகள் இந்த தொழிலில் நீடித்து நிலைக்க காரணமாக இருக்கிறது. இந்த நகரத்தை பொறுத்தவரை பெரும்பாலானவர்களுக்கு டைல்ஸ் மற்றும் செராமிக் பொருட்கள் உற்பத்தி தான் குடும்பத்தொழில் என்பதால் இந்த திறன் சார்ந்த ஊழியர்கள் எளிதாக கிடைத்து விடுகின்றனர்.
உலகிலேயே தரம் வாய்ந்த டைல்ஸ்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சர்வதேச அளவில் குஜராத்தின் மார்பின் நகரில் தயார் செய்யப்படும் டைல்ஸ்களுக்கு டிமாண்ட் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் டைல்ஸ் உற்பத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. ஆலைகளை நிறுவ நிதியுதவிகளை கூட செய்கிறது. இங்கே டைல்ஸ் தயாரிப்பதற்கான மூலதனப் பொருட்கள் மிக எளிதாகவும் தரமானதாகவும் கிடைக்கின்றன.
உயர்தரமான செராமிக் டைல்ஸ்களை தயாரிக்க தேவையான மணல் உள்ளிட்டவை கிடைப்பது இங்கு உள்ள மக்கள் இந்த தொழிலில் வலுவாக இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மார்பி நகரத்தை பொருத்தவரை அகமதாபாத் ,ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுடன் எளிதாக போக்குவரத்து வசதி கொண்டிருக்கிறது.
இங்குள்ள பலரும் கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றை பெரிதளவில் வெளியில் காட்டிக் கொள்வது இல்லையாம். இங்க இருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த தொழிலில் தான் ஈடுபட்டுள்ளனர் கிட்டதட்ட நான்கு லட்சம் பேருக்கு இவர்கள் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications