ஈரான் நாட்டின் ராணுவ அமைப்பான IRGC ஹார்முஸ் நீரிணையில் 2 எண்ணெய் கப்பல்களை முறைகேடான பணிகளைச் செய்வதாக அறிவித்து ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளது. இந்த சூப்பர்டேங்கர் கப்பல்கள் திட்டமிட்டு தனது டிராகிங் சிஸ்டத்தின் அமைப்பைத் திட்டமிட்டு ஆஃப் செய்துள்ளது, ஈரான் ராணுவம் பல முறை எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் இயங்கிய காரணத்தால் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடத்த சில நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் Mombasa மற்றும் Al Bahiyah ஆகிய இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவரும், மற்ற நாடுகளைச் சேர்ந்த 8 பேரும் காயமடைந்துள்ளனர்.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சரமாரியாகத் தாக்குதலைத் துவங்கியுள்ளது. UAE நாட்டின் இரு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கிஷ் தீவு, ஜாம் தீவு, கேஷ்ம் தீவு, புஷேர் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த 4 பகுதிகளும், எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தக சந்தைக்கு முக்கியமான பகுதியாகும்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் உடனடியாக பதில் தாக்குதல் செய்துள்ளது மூலம் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், குவைத் நாட்டில் இருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களைத் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் டிரம்ப் முக்கியமான அறிவிப்புகளை எடுத்துள்ளார்.
அடுத்த சில மணிநேரத்தில் ஈரான் துறைமுகத்திற்கு அமெரிக்காவின் கடற்படை முடக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய்க்கு மொத்தமாக முடங்க உள்ளது, இதேபோல் ஈரான் துறைமுகத்திற்கு எவ்விதமான கப்பலும் உள்ளேயும், வெளியேயும் நுழைய முடியாத நிலை மீண்டும் உருவாகும்.
இதேவேளையில் ஈரான் நாட்டின் மறுப்பக்கம் யெமன் நாட்டில் இருக்கும் ஹவுதிக்கள் அந்நாட்டின் சனா விமான நிலையத்தில் சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதற்கு பதிலடியாக சவுதி மீது ஏவுகணை தாக்குதல் தொடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுமட்டுமா, ஐரோப்பிய கமிஷன் மற்றும் பல்வேறு நாடுதள் சேர்ந்து காசாவுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் காசாவுக்கு வரும் வேளையில், இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு காசா மற்றும் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த வளைகுடா பகுதிகளும் தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications