அதானி குழுமத்தை சுற்றி பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதானி குழுமம் குறித்த கேள்விகள், பேச்சுக்கள் மூலம் கடும் அமளியாகவே உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் மும்பை விமான நிலையத்தைச் சிபிஐ மற்றும் இடி போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜிவிகே நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு ஜிவிகே நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜூலை 2021
ஜூலை 2021ல் மும்பை விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சஞ்சய் ரெட்டி NDTV-க்குக் கொடுத்த பேட்டியில் மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஜிவிகே குழுமம்
ஜிவிகே குழுமத்தின் ஏர்போர்ட் வர்த்தகத்திற்கு நிதி திரட்டும் பணியில் இருந்த நேரத்தில் தான் கௌதம் அதானி தங்களை அணுகியதாகவும், ஏர்போர்ட் வர்த்தகத்தில் அதிகப்படியான ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜிவிகே குரூப் அதானி குழுமத்திடம் ஒப்பந்தம் செய்தோம் என ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ரெட்டி
மேலும் கௌதம் அதானி ஒரு மாதத்தில் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதாக உறுதி அளித்தார், இது மிகவும் முக்கியமானதாக எங்களுக்கு விளங்கியது. இதன் மூலம் எங்களுடைய முடிவு அனைத்தும் நிறுவனத்தின் நலனுக்காகத் தான் எனவும் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கி அறிக்கை வெயிட்ட காரணத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதன் மூலம் அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கு முதலீட்டாளர்களின் நெருக்கடியை எதிர்கொண்டது.
சக்திகாந்த தாஸ் விளக்கம்
இந்த நிலையில் தான் இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.
இந்திய வங்கி அமைப்பு
தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications