மும்பை ஏர்போர்ட்-ஐ அதானி குழுமத்திற்கு விற்க எந்த அழுத்தமும் இல்லை.. GVK தலைவர் விளக்கம்..!

அதானி குழுமத்தை சுற்றி பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதானி குழுமம் குறித்த கேள்விகள், பேச்சுக்கள் மூலம் கடும் அமளியாகவே உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் மும்பை விமான நிலையத்தைச் சிபிஐ மற்றும் இடி போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜிவிகே நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு ஜிவிகே நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை விமான நிலையம்

மும்பை விமான நிலையம்

மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜூலை 2021

ஜூலை 2021

ஜூலை 2021ல் மும்பை விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சஞ்சய் ரெட்டி NDTV-க்குக் கொடுத்த பேட்டியில் மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 ஜிவிகே குழுமம்

ஜிவிகே குழுமம்

ஜிவிகே குழுமத்தின் ஏர்போர்ட் வர்த்தகத்திற்கு நிதி திரட்டும் பணியில் இருந்த நேரத்தில் தான் கௌதம் அதானி தங்களை அணுகியதாகவும், ஏர்போர்ட் வர்த்தகத்தில் அதிகப்படியான ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜிவிகே குரூப் அதானி குழுமத்திடம் ஒப்பந்தம் செய்தோம் என ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ரெட்டி

சஞ்சய் ரெட்டி

மேலும் கௌதம் அதானி ஒரு மாதத்தில் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதாக உறுதி அளித்தார், இது மிகவும் முக்கியமானதாக எங்களுக்கு விளங்கியது. இதன் மூலம் எங்களுடைய முடிவு அனைத்தும் நிறுவனத்தின் நலனுக்காகத் தான் எனவும் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கி அறிக்கை வெயிட்ட காரணத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதன் மூலம் அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கு முதலீட்டாளர்களின் நெருக்கடியை எதிர்கொண்டது.

சக்திகாந்த தாஸ் விளக்கம்

சக்திகாந்த தாஸ் விளக்கம்

இந்த நிலையில் தான் இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.

இந்திய வங்கி அமைப்பு

இந்திய வங்கி அமைப்பு

தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+